Wednesday, May 18, 2022

எப்போதும் காதில்..


எப்போதும் காதில்..

கே.பி.ஜனார்த்தனன்

ஐபாட் ஸ்பீக்கரை காதில் செருகியபடியே சமையலைக் கவனித்துக்கொண்டிருந்த மனைவி பத்மாவைப் பார்க்கப் பார்க்க பாஸ்கருக்கு எரிச்சலாக வந்தது.
அவளைக் காதலித்து மணந்தவன் அவன். பெரிய சங்கீத வித்வானான தந்தையைப் பகைத்துக்கொண்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டவனுக்கு அவளிடம் பிடிக்காத ஒரே விஷயம் இது ஒன்றுதான்.
லேசாய் சொன்னால் கேட்பதாயில்லை. அன்றைக்கு சண்டை பெரிதாகி விட்டது. "அப்படி என்ன எப்பவும் பாட்டு வேண்டிக் கிடக்கு?"
அவள் சொன்னாள்: "உங்க அப்பாவோட சண்டைபோட்டுட்டு அவர் மேலே உள்ள கோபத்தில் அவர் சம்பந்தப்பட்ட எந்த பொருளைக் கண்டாலும் வெறுக்கிறீங்க. ஆனா நானோ ஆர்வத்தோடு அவர்கிட்ட சங்கீதம் படிக்க வந்து அங்கே உங்களை சந்திச்சு காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். அவரோட உயர்ந்த இசையைக் கேட்காம என்னால இருக்க முடியலே. அதான் உங்களுக்கு கேட்காத விதத்தில் மாமாவோட பாட்டைக் கேட்டு ரசிக்கிறேன். தப்பாங்க?" பாஸ்கருக்குக் கோபம் வரவில்லை.

('குமுதம்' 27 8 2008 இதழில் வெளியானது.)

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கதை.

இராய செல்லப்பா said...

அட, இப்படியும் கூட உண்டா!

கே. பி. ஜனா... said...

வெங்கட் நாகராஜ், இராய செல்லப்பா : மிக்க நன்றி

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!