Wednesday, May 4, 2022

கல்வியின் பெருமையை சொன்னவர்...




அமெரிக்க கல்வியின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். ‘கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று, தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு,’ என்று ஆயிரத்தி எண்ணூறுகளில் பேசியவர். "வறுமையை ஒழிக்கவும் குற்றங்களைக் குறைக்கவும் அதுவே உதவும்."

Horace Mann… (1796 - 1859) இன்று பிறந்த நாள்!
இளமையில் வறுமையில் உழன்றவர் பயின்றது பெரும்பாலும் நூலகங்களில்..
ஸ்கூல் சிஸ்டம் ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர். ஒரு கிளாஸில் எல்லா மாணவர்களும் என்பதில் தொடங்கியது வயதுக்குத் தகுந்தபடி தனித்தனி கிளாஸ் என்று வளர்ந்தது.
இந்த ஹோம் வொர்க்! கண்டுபிடிச்சது யாருன்னு குமுறுவாங்க சில பசங்க. அது இவரு இல்லீங்க. ஆனா அதை ஒரு முக்கியமான விஷயமா கொண்டு வந்ததில் இவர் பங்கு இருக்கு...
ஊர்ஸெஸ்டர் என்ற ஊரில் அமெரிக்காவின் முதல் மனநல மருத்துவமனை ஏற்பட்டதன் பின்னால் இவரது உழைப்பு மிக.
மாணவர்களுக்கு அவர் சொன்னது: ‘மனிதகுலத்துக்கு ஏதேனும் வெற்றி தராமல் மரணம் அடைய வெட்கப்படுங்கள்!’
இன்னும் சொன்னவை: ‘புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத அறையை போன்றது.’
'காணவில்லை! நேற்று சூரியோதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் இடையில் இரண்டு பொன் மணி நேரம். அறுபது வைர இழைகளால் ஆனது. கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் கிடையாது. அவை காணாமல் போனது போனதுதான்.'
‘மற்றவர்களுக்கு நாம் செய்யும் ஆகப் பெரிய சேவை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ளச் செய்வதுதான்.’
‘வாழும்போது செய்யும் தர்மம் சாகும்போதும் செய்யும் தர்மத்தை விட வித்தியாசமானது. இது தாராள மனதுடன் பரோபகார சிந்தையில் எழுவது. மற்றது பயத்தில் அல்லது கௌரவத்தில் எழுவது.’
‘மாணவனிடம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை உருவாக்காமல் ஓர் ஆசிரியர் கற்றுக் கொடுக்க முயற்சிப்பது குளிர்ந்த இரும்பில் சுத்தியலால் அடிப்பது போல.’
‘பழக்கம் என்பது ஒரு கயிறு. தினம் ஒரு இழையாக பின்னுகிறோம், கடைசியில் அதை அறுக்க முடியாத அளவுக்கு.’

‘நன்றாக எண்ணுவது நன்று. நன்றாகச் செயல் படுவது தெய்வீகமானது.’

‘கல்லாத வரையில் ஒரு மனிதன் தன் முழு உயரத்தை அடைவதில்லை.’

மற்றவர்களுக்கு எதுவுமே செய்யாமல் இருப்பது நம்மையே இழப்பதாகும். பரிவுடனும் தாராளமாகவும் இல்லாவிடில் வாழ்வின் சிறந்த பகுதியை இழக்கிறோம். தன்னை விட்டு வெளியே செல்கிற இதயம் இன்னும் பெரிதாகி இன்பத்தால் நிரம்புகிறது. அக வாழ்க்கையின் மிகப்பெரும் ரகசியம் இதுதான். மற்றவர்களுக்கு ஏதேனும் செய்வதன் மூலம் நமக்கு நாம் பெரும் நல்லது செய்கிறோம்.'

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான வாசகங்கள். தகவல் பகிர்வு சிறப்பு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!