Saturday, February 4, 2017

அவள் - (கவிதைகள்)

371
தென்றலால் 
இன்னும் குளிர்விக்க முடியாத 
மனம் உன்னுடையது.

372.
பார்த்துக் கொண்டேயிருக்கலாம்
மழையை.
பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் 
உன்னை.

373.
மந்திரம் கற்று வந்தேன்
உன்னை மறக்க.
மந்திரம் மறந்துவிட்டது.

374.
அமாவாசை இல்லாத ஊராகிவிட்டது
நீ வந்ததிலிருந்து.

375.
உன்னிலும் அழகான பெண்ணுண்டு.
என் ஞாபகத் தடாகத்தில்
உன் நிழல்.

376.
சுகமாய் நனைகிறேன்
நீ உச்சரிக்கையில்
அருவியாய் விழும்
வார்த்தைகளில்.

377.
அடையாளம் தெரியாத அளவுக்கு
அழகாகிக் கொண்டே போகிறாய்..

378.
அள்ளித் தருவது வார்த்தைகளை
மொழியா உன் அழகா
தெரியவில்லை.

379.
உன் சித்திரம் என் மனதில்.
என் மனம் உன் சித்திரம்.

380.
நீ தரும் ஆறுதலின் இதம்
நீடிக்கும் அடுத்த ஜென்மம் வரையிலும்.

>>><<<

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// அடையாளம் தெரியாத அளவுக்கு //

என்னவொரு ரசனை...!

Nagendra Bharathi said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

ஹப்பா அருமை சார்! ரொம்பவே ரசித்து எழுதுகிறீர்கள் சார்!!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!