Friday, February 10, 2017

அவள்... (கவிதைகள்)

381.
நினைவில் பசி வருவதில்லை
நிறைந்தே இருக்கிறது மனம்
உன் நினவுகளில்.

382.
என் சிந்தையின்
ஒரே விந்தை.
நீ.

383.
அழகின்
கரையில் நான்.
கடலாய் நீ.

384.
தொலைத்துவிடாதே என்கிறாய்
என் ரசனையை.

385.
ரொம்பவே இடம் கொடுத்துவிட்டாய்
நாணத்துக்கு.

386.
என் மறதிக்கு சவால்விடும்
உன் நினைவுகள்...

387.
எப்போதோ பேசிய ஒரு வார்த்தை.
உன்னுடன் பேசியது என்பதால்
இப்போதும் நினைவில்.

388.
சட்டென்று மனதில் தோன்றும்
கவிதை.
சர்வகாலமும் மனதில் தோன்றும் 
நீ.

389.
கடன் கேட்டு வந்து நிற்கிறது
அழகு உன்னிடம்.

390.
நீ கொடுத்த உற்சாகம்
மட்டுமே நான்.

><><><

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன்
நன்றி நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

சட்டென்று உற்சாகம் தருகிறது வரிகள்...

ரிஷபன் said...

ரொம்பவே இடம் கொடுத்து விட்டாய் உன் நாணத்திற்கு

ஆஹா

Nagendra Bharathi said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் ரசித்தோம் சார்!!! வாசிக்கும் போது சொல்லத்தெரியாத உணர்வு மேலிடுகிறது!!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!