Tuesday, December 13, 2016

அவள் - (கவிதைகள்)


351.
எத்திசையும் பறந்திட
எனக்குள் நீ
ஓர் ஆகாசமாய்...

352.
ரோஜாவும் மல்லிகையும் எனில்
எனக்குக் குழப்பம்
முதலிடம் வழங்குவதில்.
ரோஜா, மல்லிகை, நீ - எனில்
குழப்பமில்லை.

353.
வீசாத காற்று
பேசாத நீ.

354.
உன் கண் எழுதும் சித்திரங்களைக்
காற்றில் படிக்க முயலுகிறேன்.

355.
ஆயிரம் ஜன்னல்களைச்
சாத்த வேண்டியிருக்கிறது
அரை நிமிடம் உன்னை 
நினைக்காமலிருக்க.

356.
தொலைவில் நீ செல்ல செல்ல
உன் பிம்பம் மனதில்
பெரிதாகிறது.

357.
நான் 
உன் இனிய பக்கம்.
நீ 
என் இனிய புத்தகம்..

358.
நினைவுகளின் எல்லையில் 
நீ நிற்பதால்
எல்லையற்றுப் போனது 
நினைவு.

359.
திடுக்கிட்டு எழுகிறேன்,
மனதில் நீ அசையும் ஓசை.

360.
வெகு தூரத்தில் நாம்
பக்கத்தில் நம் இதயங்கள்.

><><

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... ரசித்தேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

ரிஷபன் said...

ஆயிரம் ஜன்னல்களைத் திறக்கத் தயார்..
உங்கள் கவிதைகளை வாசிக்க

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

Thulasidharan V Thillaiakathu said...

ரசித்தோம் அனைத்தையும்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!