Sunday, April 10, 2016

அவள் - கவிதைகள்...


270
கேட்கும் இசை இனிமை போல
பார்க்கும் திசை இனிமை நீ.

271
உன் சிரிப்பு 
மறைகையில்
நானும்.

272
முற்றுப்புள்ளி வைக்க முடியாமல்
திணறுகிறேன்
உன் மீதான 
கவிதை வரிகளுக்கு.


273
உன் அமைதி 
என்னுள்
கொந்தளிக்கிறது.

274
என் காபி கோப்பையில்
விழும் உன் சில 
வார்த்தைகள் எனத் 
தெரிந்திருந்தால்
சொல்லியிருப்பேன்
சுகர்லெஸ் காபி என்று.


275
நாணம் சிறகடிக்கிறது
மெலிதாய் நீ
நகைத்திடும் போதெல்லாம்.

276
காந்தம் ஊசியை 
நகர்த்துவது போலவே 
உன் பார்வை 
என்னை.


277
ஒளிக் கற்றைகள்
விலகிடும்போது
உன்னிடமிருந்து அவை
புறப்படுகின்றன.

278
நீ தேடாத போதும்
உன் பார்வை என்னை
தேடுகிறது.

279
எப்போதும் சொல்லுகிறாய்
எனக்கு உன்னைப் பிடிக்கிறதென
வார்த்தைகளால் அல்லாது.

280
என் பார்வையில் நீ 
படாததில் கஷ்டமில்லை, என் 
கண்ணுக்குள் நீ இருப்பதால்.

><><

1 comment:

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தையும் ரசித்தோம். சுகர்லெஸ் காபி ரொம்பவே இனித்தது!!!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!