Sunday, March 6, 2016

அவள் - (கவிதைகள்)


260
ஒரு பார்வை பார்த்தாய்
உள்ளத்தில் பூத்தாய்.

261
ஆகச் சிறந்ததையே 
எதிலும் நாடும் நீ
என்னில் மறந்ததேன்?

262
நினை என்னை நினை என
உனை நான் வேண்டுவதுபோல
நனை என்னை நனை என
மலர்கள் மழையிடம்.

263
உன்னை நினைப்பதை 
நிறுத்தி விட்டேன்
தும்மல் வராமலிருக்க
24 மணி நேரமும் உனக்கு.

264
நீ மட்டுமே அறிந்தது: 
என் மனதின் மொழி.

265
என் ஒரு நாள் பேச்சு
ஒரு நிமிடத்தில் புரிகிறதுனக்கு.
உன் ஒரு நிமிடப் பேச்சு
புரிய ஒரு நாளாகிறதெனக்கு.


266
சென்று கொண்டேயிருக்கும் நினைவுகள்
சென்றடைவது எப்போதும்
உன்னிடத்திலேயே.

267
எல்லா அன்பையும் 
எடுத்துக் கொண்டுவிட்டாய்
மொத்தக் குத்தகைக்கு நீயெனில்
எனக்கென்ன மிஞ்சும்
யோசித்துப்பார் நீயே.


268
பல்லவி மட்டுமே நான்
பாடுகிறேன்
சரணங்கள் பாடுவது நீயே.

269
நினைத்தாலே
கவிதையாகி விடுகிறாய் 
நீ.

><><><><

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

நினைத்தாலே
கவிதையாகி விடுகிறாய்
நீ.

அருமை

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

vimalanperali said...

கவிதை,கவிதை,,,,,,/

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தும் செம !!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!