Friday, February 12, 2016

நல்லதா நாலு வார்த்தை... 65


'நாம் கட்டும் சுவர்கள் நிறைய; 
பாலங்களோ போதா.'
<>
- Isaac Newton
('We build too many walls and not enough bridges.')


’வெற்றி பெற்றனரா தோல்வியுற்றனரா 
ஒரு பெற்றோர் என்பதை
என்ன நடக்கிறது பேரப் பிள்ளைகளுக்கு 
என்பதறிந்த பின்னரே சொல்ல முடியும் 
என்றொருவர் சொல்லக் கேட்டேன்.’
<>
- Richard Strout
(’I once heard somebody say that you can't tell whether a parent has
been a success or failure till you find out what happens to the grand children.’)



'ஆனந்தத்தின் முதல் செய்முறை: 
கடந்த காலத்தின் மேல் 
அளவற்ற சிந்தனையைத் தவிர்க்கவும்.'
<>
- Andre Maurois
('The first recipe for happiness is : avoid too lengthy meditation on the past.')


'வளைய முடிகிற இதயங்கள் 
வரம் பெற்றவை; 
ஒரு நாளும் அவை 
ஒடிக்கப்படா.'
<>
- Albert Camus
('Blessed are the hearts that can bend; they shall never be broken.')


'பத்தாயிரம் நட்சத்திரங்களுக்கு
எப்படி நடனமாடக்கூடாது 
என்று சொல்லித் தருவதைவிட
பறவை ஒன்றிடமிருந்து 
பாடுவது எப்படி என்று கற்றுக் கொள்வேன்.'
<>
- E. E. Cummings
( 'I'd rather learn from one bird how to sing than teach
10000 stars how not to dance.')


'கல்யாணம் என்பது நம்
கடைசி மிகச் சிறந்த
வளர்வதற்கான வாய்ப்பு.'
<>
- Joseph Barth
('Marriage is our last, best chance to grow up.')


'உள்ளுக்குள் நாம் சாதிப்பது
வெளி நிஜத்தை மாற்றிடும்.'
<>
- Plutarch.
('What we achieve inwardly will change outer reality.)

><<>><

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

எதை எடுத்து வைத்துக் கொள்வதென்று தெரியாமல் இந்தப் புத்தகத்தையே எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்... தொகுத்து வெளியிடலாம். அருமை

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.... தொடர்கிறேன்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!