Friday, August 7, 2015

அவள் (கவிதைகள்)

162
எங்கிருந்தோ கிடைத்துவிடுகின்றன
வார்த்தைகள், உன்னை
எழுதும்போது.
  
163.
நீ – வாழ்க்கையில்
என்னுடைய
ஒரே ஆனந்த ஆச்சரியம்!

164.
நீயும் நானும்.
இதற்கு மேலும்
இருக்கிறதா என்ன
வாழ்க்கை?

165
மழையும் நீயும் ஒன்று -
மனதைக் குளிர்விப்பதில்.

166
நான் படித்த
ஆகச் சிறந்த கவிதை.

167
தும்பைப்பூ தோற்கிறது
உன்
இதயத்தின் வெண்மையில்
.
168
சொல்லவேயில்லை சாபமிட்டவர்
விமோசனம் நீதான் என்று.

><><><
(படம்-நன்றி:கூகிள்)

7 comments:

ரிஷபன் said...

அழகான விமோசனம்.. அருமையான அவள்.. நச்சென்று கவிதைகள்

கோமதி அரசு said...

மழையும் நீயும் ஒன்று -
மனதைக் குளிர்விப்பதில்.//

அருமை, அழகான கவிதைகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

நீயும் நானும்.
இதற்கு மேலும்
இருக்கிறதா என்ன
வாழ்க்கை?

அற்புதம் நண்பரே
நன்றி

Nagendra Bharathi said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வெங்கட் நாகராஜ் said...

அருமை. அனைத்தையும் ரசித்தேன்.

”தளிர் சுரேஷ்” said...

காதல் வரிகள் அனைத்தும் அருமை!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!