Tuesday, August 25, 2015

அவள்... (கவிதைகள்)

169
நீ சிரித்தாய்
இதயத்தில்  மணியடித்தது.

170
நாளின் முதல் நினப்பும்
இரவின் கடைசியும் நீ

171
திறக்காத கதவொன்று
இதயத்தில் வைத்திருந்தேன்
திறந்தே கிடக்கிறது
நீ வந்த நாளிலிருந்து

172
நிலைப்படியில் இடித்துக்கொள்கிறேன் உன்
நினைவில் தடுமாறி
நித்தமும்.

173
மனக் குகை முழுவதும்
உன் ஓவியங்கள்.

174
எனக்குள் இருக்கும் மனதுக்கு
என்னைவிட நெருக்கமாய்
இருக்கிறாய்.

175
எடையற்று உருவற்று
அலைகிறேன்
என்னை உன்னில்
பார்ப்பதால்.

><><><

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நாளின் முதல் நினப்பும்
இரவின் கடைசியும் நீ
அருமை நண்பரே
தம +1

மனோ சாமிநாதன் said...

//எனக்குள் இருக்கும் மனதுக்கு

என்னைவிட நெருக்கமாய்

இருக்கிறாய்.//

அழகிய வரிகள்!!

கோமதி அரசு said...

மனக் குகை முழுவதும்
உன் ஓவியங்கள்.//

அழியா ஓவியம்.
அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துமே அருமை....ஓவியமும், நெருக்கமும் இன்னும் நெருக்கமாகியது ரசிக்க வைத்தன....

”தளிர் சுரேஷ்” said...

ரசித்தேன்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!