Tuesday, May 12, 2015

அவள் - (கவிதைகள்)


128
வா பேசிக்கொண்டிருக்கலாம்
கொஞ்ச நேரம்..
ஒரு நாலு நாள்!
<>

129.
வெளியே பனி கொட்டுகிறது
வந்து விடு,
என் இதயத்துக்குள்.
<>

130
எத்தனை புரண்டாலும்
வந்து உன்னைப் பார்க்க முடியாமல்
திரும்பி செல்கின்றன
அலைகள்!
<>

131
கண்ணிலிருந்து அதிகம் வருகிறதா
உதட்டிலிருந்தா என்று
கண்டு பிடிக்க முடியவில்லை..
உன் சிரிப்பை!
<>

132
நீ மௌன விரதமிருந்தால்
எனக்கொன்றுமில்லை..
எல்லா சேதியையும்
கண்களே சொல்லிவிடுகின்றனவே?
<>

133
தினம் ஒரு புத்தக வெளியீட்டு விழா
நடக்கிறது மனதில்..
உன்னைப் பற்றிய என்
நினைவுகள்.

>><><><<

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அற்புதமான வார்த்தை பிரயோகம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த சிரிப்பு... ரொம்பவே ரசனை...!

கரந்தை ஜெயக்குமார் said...

கண்ணிலிருந்து அதிகம் வருகிறதா
உதட்டிலிருந்தா என்று
கண்டு பிடிக்க முடியவில்லை..
உன் சிரிப்பை!

அருமை அருமை
தம +1

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா ரசனை மிக்க வரிகள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!