Saturday, March 7, 2015

அவள் - 17 (கவிதைகள்)


106
பெரும் துக்கத்துக்குப்
பின் வரும்
சந்தோஷம் போல
நீ.
 <>

107
நான் இல்லாத நாட்களில் உன்
முகம் பார்க்கும் கண்ணாடியைத்
தொலைத்திருந்தாய் நீ.
<>

108
அந்த இரு கவிதைகளுக்குள்
ஆக்ரோஷமான விவாதம்
ஆர் உன்னை
சரியாக வர்ணித்ததென்று.
<>

109
உன் விழிகளில்
நீந்திடும் கனவுகளில் என்
வண்ணம் என்னவோ?
<>

110
எவ்வித கிட்டப் பார்வையோ
தூரப்பார்வையோ இல்லை
என் உணர்வுகளைப்
படிக்கையில் உனக்கு.
<>

111.
மிகுந்த பிரயாசைப்பட வேண்டியிருந்தது அவள்
அழகு விழுந்து விடாமல் சிரிப்பதற்கு
அவள்.
<>

112
 உன்னை ஒரு பார்வை
வியந்து பார்த்துவிட்டு
தன்னை எழுதிக் கொண்டது
கவிதை.

><><><><

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

111 மிகவும் பிடித்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

விவாதத்தையும் ரசித்தேன்...

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துக் கவிதைகளும் அருமை! முகம் பார்க்கும் கண்ணாடி அருமை! அதைப் போல் ஒன்று நாங்களும் எழுதி வைத்திருந்தோம்.....ஆனால் இத்தனை அருமையாக அல்ல....!!

கவிதகளின் விவாதம் ஆஹா போட வைத்தது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உன்னை ஒரு பார்வை வியந்து பார்த்துவிட்டு தன்னை எழுதிக் கொண்டது கவிதை.//

அதனால்தான் அது அழகான கவிதையானது :)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!