Monday, December 15, 2014

அவள் - 13.



79.
உன் பாரா முகமே
இன்னும் அகலாமல் நெஞ்சில் 
வியாபித்திருக்க,
பார்க்கிற முகத்தை எங்கே
பத்திரப் படுத்துவேன்?

80
மெல்ல இருள் பிரிகிறதா
அல்லது ஒளி விரிகிறதா 
புரியாது புலரும் பொழுது.
அழகு வெட்கம் அளிக்கிறதா
வெட்கம் அழகூட்டுகிறதா
அறியாது மலரும் முகம்.

81
உன் 
முகப் புத்தகத்தைப் படிக்க 
ஆரம்பித்தவன்
முதல் பக்கத்திலேயே
இருக்கிறேன் இன்னும்.

82
உன் போல் 
எனை நேசிக்க
முடியவில்லை
என்னாலும்
எந்நாளும்.

83
மனதை கிள்ளிப் போனாய்...
ஏன்
திரும்பிப் பார்க்க வேண்டும்?

84
மனமின்றி உன் பக்கத்தில் 
அமர்ந்திருக்கிறேன்
அது உன் கையில்.

><><><



7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கு வரிகள் பகிர்வுக்கு நன்றி தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்
த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

அழகு மலரும் வரிகாள் அருமை..பாராட்டுக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

//உன்
முகப் புத்தகத்தைப் படிக்க
ஆரம்பித்தவன்
முதல் பக்கத்திலேயே
இருக்கிறேன் இன்னும்.//
அருமை நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ரசித்தேன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பலரும் அனுபவித்த சுகத்தை அனுபவித்திருப்பர். நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உன் முகப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவன் முதல் பக்கத்திலேயே இருக்கிறேன் இன்னும்.//

அருமை :)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!