Monday, June 16, 2014

தந்தையர் தினம்...


போற்றப் படுவதில்லை வெகுவாக
ஆயினும் உணரப்படுகிறார்.
எப்போதும் வருவதில்லை
எனினும் தோன்றி விடுகிறார்
அதற்கான தருணங்களில்.
அடுக்கடுக்காய் அறிவுரைதான்
அவசியம் பிற்பாடுதான் தெரிகிறது.
அவரால் முடியவில்லை
அவ்வப்போது மனதைத் தொட.
ஆனால் செய்தவை அறிய வரும்போது 
ஆக்கிரமித்துக் கொள்கிறார் மனதை.

><><><
(படம்- நன்றி: கூகிள்)

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பரே

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

தந்தையர் தினத்தை போற்றும் கவிதை அருமையாக உள்ளது உண்மையில் நேரில் பேசும் தெய்வங்கள் போற்றப்பட வேண்டும்

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
ஐயா.
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அற்புதம்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

தந்தையர் தின வாழ்த்துகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!