Friday, May 30, 2014

அவள்... 3



 
 
11.

உன்னைக் கண்டதும்

மனதிலிருந்து உதிர்ந்த

வார்த்தைகளை

எடுத்துக் கோர்க்கிறேன்

ஓர் மாலையாக.

 

12.

எப்படி எழுதப் போகிறேன்

என் அடுத்த கவிதையை

என்பது தெரியாது,

எப்படியும் அதில்

இருப்பாய் நீ

என்பது மட்டும் தெரியும்.

 

13

வீசியதென்னவோ நீ

ஒரு பார்வைதான்.

புயலுக்கு சமானமாய்

இருக்கிறது சேதம்.

 

14

சிரிக்கப் போகிறாயா

கொஞ்சம் இரு

அணிந்து கொண்டுவிடுகிறேன் என்

கவச குண்டலங்களை!

 

15

உன் தெற்றுப்பல்லை

மட்டும் நம்பாதே,

நீ சிரிக்கும்போது

அது வேறு

தனியாக சிரிக்கிறது.

 

><><>< 

4 comments:

Muruganandan M.K. said...

"..வீசியதென்னவோ நீ
ஒரு பார்வைதான்.
புயலுக்கு சமானமாய்
இருக்கிறது சேதம். .." அருமையாகச் சொன்னீர்கள்

thendralsaravanan said...

very nice feel!

இராஜராஜேஸ்வரி said...

அவள் அழகு ..!

வெங்கட் நாகராஜ் said...

ஒரே ஒரு பார்வையின் தாக்கம் அதிகம் தான்.....

அனைத்துமே அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!