Thursday, February 9, 2012

மன உரம்




னம் தெளிந்திருப்பதைப் போல 
தெளிந்திருக்கிறது ஆகாயம் சில நேரம்

மனம் பூத்திருப்பதைப் போல 
பூத்திருக்கிறது மரம்  சில நேரம்

மனம் குளிர்ந்திருப்பதைப் போல 
குளிர்ந்திருக்கிறது அருவி நீர் சில நேரம்

மரத்தையும் ஆகாயத்தையும் 
அருவி நீரையும் பார்த்து 
மனம் உரம் பெறுகிறது பல நேரம்.

<><><>

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

மிக நல்ல கருத்தினைக் கொண்ட கவிதை...

இயற்கையை பார்த்து நமது சிந்தனைக்கும் ஒரு நல்ல உரம் கிடைக்கத்தான் செய்கிறது....

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை ;)

Rekha raghavan said...

இயற்கை மன உரத்தை விட்டுவிட்டு செயற்கை மன உரத்தைத் தேடி சீரழிகிறோம். படிப்பினையுள்ள கவிதை.

மனோ சாமிநாதன் said...

இயற்கையுடன் இணைந்த வாழ்க்கைதான் நம்முடையது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

கீதமஞ்சரி said...

எப்போதும் உவமைகள் வெளியில் தோன்றி உள்ளத்துள் உறையும். இக்கவிதையில் உள்ளத்து உணர்வுகளோடு ஒப்பிடப்படுகிறது உரத்துக்கான உவமைகள். இயற்கை அளிக்கும் உரம் நன்று. உரத்தால் விளைந்த கவிதையும் வெகுநன்று. பாராட்டுகள்.

மகேந்திரன் said...

இடைவிடா முயற்சியுடன்
தன் நிலையை தக்கவைத்துக்கொள்ளும்
இயற்கையிடமிருந்து நாம்
கற்றுக் கொள்ளவேண்டும்.
நல்ல கவிதை நண்பரே.

ADHI VENKAT said...

அருமையான கவிதை.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

anbalagangomathi said...

Excellent Jana.

Tight schedule. sorry jana. I will send my book very soon.

ஹ ர ணி said...

The comment is mine jana. Harani (Anbalagan gomathi)

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களுக்கு ஒரு விருது காத்துள்ளது.

பெற்றுக்கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்.

http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html

அன்புடன் vgk

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கு என் இன்றைய பதிவில் விருதினை அளித்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!