சொன்னவர் James Baldwin. (1924 - 87) அமெரிக்காவின் மிக முக்கிய நாவலாசிரியர், கவிஞர், பேச்சாளர். இன்று பிறந்த நாள்!
திரைப்படமாகிய இவரின் ‘If Beale Street Could Talk’ என்ற நாவல் ஆஸ்கார் அவார்ட் பெற்றது.
இன்னும் சொன்னவை:
‘கல்வியின் முரண் என்னவெனில் ஒருவன் கற்று விழிப்புணர்வு பெற தொடங்கியதும், தான் கல்விபெறும் சமூகத்தையே பரிசீலனை செய்ய தொடங்குகிறான்.’
‘மக்கள் தங்கள் வெறுப்புகளைப் பிடிவாதமாக சுமந்து கொண்டு திரிவதற்கு ஒரு காரணம் வெறுப்புகளில் இருந்து விடுபட்டால் வலிகளுடன் போராடவேண்டுமே என்பதால்தான்.’
‘நேசி, நேசிக்க விடு. அதைத் தவிர வேறு முக்கியமான விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன?’
‘மக்கள் சரித்திரத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சரித்திரம் மக்களிடம் சிக்கிக் கொள்கிறது.’
‘அறியாமை அதிகாரத்துடன் சேர்ந்து இருப்பதுதான் நீதிக்கு கிடைக்க இருக்கிற மிகக்கொடூரமான எதிரி என்பது நிச்சயம்.’
‘வறுமையுடன் போராட நேர்ந்த எவருக்குமே தெரியும் ஏழையாக இருப்பது எத்தனை விலை உயர்ந்த விஷயம் என்று.’
‘அவற்றை அணியாமல் நாம் வாழ முடியாது என்று நாம் பயப்படுகிற, அணிந்தாலும் கஷ்டம் என்று நமக்குத் தெரிகிற முகமூடிகளை அன்பு அகற்றிவிடுகிறது.’

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!