‘மைக்கேலாஞ்சாலோவின் வாரிசு’ என்றார் ஓர் சரித்திராசிரியர்.
17 ஆம் நூற்றாண்டின் மாபெரும் சிற்பி.. Lorenzo Bernini.
இன்று பிறந்தநாள்!
சொற்ப வயதிலேயே சிற்பம் செய்தவர்.... ஆம்,, 8 வயதில்.. அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தவர், ஆம் அவரும் பிரபல சிற்பி.
கலைகளைப் பொறுத்தவரை ரோம் நகரின் பொற்காலம் அது. நகரின் தலையாய சிற்பியாக நெடுங்காலம் இவர்…
பேசுகிறாற்போன்ற ஆக் ஷன் சிற்பங்கள் இவர் ஸ்பெஷாலிடி..வடிவை வடித்ததோடு அல்லாமல் சதைகளின் செறிவையும் தன் சிற்பங்களில் செதுக்கினார்.
சிறந்த சிற்பி ஆவதற்கு 3 விஷயங்களைச் சொல்கிறார்: சிறுவயதிலேயே அழகை ரசிக்க பழகிட வேண்டும். அயராத உழைப்பு வேண்டும். ஏற்ற அறிவுரைகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
‘நம்முடைய திறமை கடவுள் கொடுத்தது. மற்றவருக்கு அதைக் கற்றுக் கொடுப்பதுதான் கடவுளுக்கு அதைத் திருப்பி செய்வது.’

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!