Wednesday, April 26, 2023

என் கனவுகள்...


‘என் கனவுகள் எனக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றிற்காக நான் வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. துன்புறும்போது அவை எனக்குப் புகலிடம். தளையற்று இருக்கும்போது அவை என் ஆகப் பெரிய சந்தோஷம்.’

சொன்னவர்Mary Wollstnecraft…
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெருமைமிகு எழுத்தாளர். 38 வயதிலேயே மறைந்த முக்கியமானவர்களில் ஒருவர். இன்று பிறந்த நாள்..
அவர் காலத்தைய ஆண்களின் மட்டற்ற சுதந்திரமும் அதிகாரமும் பெண்களுக்கு ஏற்படுத்திய சிரமங்களையும் பாதிப்பையும் தன் வாழ்க்கை அனுபவங்களில் உணர்ந்தவர், பெண்ணின் உரிமையை நிலைநாட்டத் துடித்தார்.
‘A Vindication of the Rights of Woman’ என்ற அவரது புத்தகம் பெண்ணுரிமைக்காக எழுந்த பெரும் ஆக்கங்களில் ஒன்று.
இவரே ஒரு பெரிய எழுத்தாளர் என்றாலும் Frankenstein எழுதிய மேரி ஷெல்லியின் அம்மா என்பது இன்னொரு விசேஷம்.
சொன்ன இன்னும் சில:
‘எளிமையும் நேர்மையும் சேர்ந்தே பயணிக்கும், ஏனெனில் இரண்டும் உண்மையை நேசிப்பதால் வருபவை.’
‘எந்த ஒரு மனிதனும் தீமையை தீமை என்று தெரிந்து தேர்ந்தெடுப்பதில்லை, அதை சந்தோஷம் என தவறாக நினைத்துக் கொள்கிறான், தான் தேடும் நன்மை என அதை நினைக்கிறான்.’
‘நான் உன்னிடம் விரும்பியதெல்லாம் உன் இதயமே, அது போய் விட்ட பின் உன்னிடம் எனக்கு கொடுப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை.’
><><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!