Friday, July 19, 2019

அவள் - கவிதைகள்


539
நகர்கிறாய் நீ.
நாளை இன்னும் ஸ்பெஷலாகிறது 
எனக்கு.

540
ஒரு நொடியில் படம் பிடிக்கிறாய்
உள்ளத்தோடு என் உருவத்தை.
ஆயிரம் நொடியில் நான் வெறும்
உன் புருவத்தை.

541
மின்னலாகத் தெறிக்கிறாய்
கவிதையின் கடைசி வார்த்தையில்!

542
நினைக்காத தருணங்களிலும்,
எப்படி நினைக்க மறந்தேன் என
நினைக்கிறேன் உன்னை!

543
இன்னொரு பூமி
எங்கும் கிடையாது,
இன்னொரு நீயைப் போலவே.

544
என்ன அவசரம்?
முந்திக்கொண்டு சிரிக்கும் கண்கள்!

545
எல்லாருக்கும் உன் புன்னகை, 
புன்னகை.
எனக்கு மட்டும் தெரியும் அதிலொரு 
மென்நகை.

546
பாதம் பதித்தாய் வீட்டில்,
பதம் பதித்தேன் ஏட்டில்.

547
சின்னதா ஒரு மனம்..
என்னமா ஒரு குணம்!

548
வீசும் திசையறியா
விண் தென்றல் நீ!

><><

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் ரசிக்க முடிந்தது. தொடரட்டும் அவள் கவிதைகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!