Saturday, March 3, 2018

அவள் - (கவிதைகள்)

451
நின்னை நோக்கிட
காலடியில் நழுவுகிறது
காலம்.

452
பிரசன்னமானாய் நீ.
மாயமானேன் நான்.

453.
உன் அழகை ஒரு
கவிதையாக எழுதும்போது
அந்த அழகை இன்னும்
அதிகமாக ரசிக்கிறேன்.

454.
நீயும் உன்
நினைவுகளும்!
நிறைந்தது என்னுலகம்!

455.
காண்பதெல்லாம் அழகாய்
உணர்வதெல்லாம் அன்பாய்
நீயிருக்க உன் முன் நான்
வெட்கிப் போகிறேன்.

456
இதயத்தில் விழுந்த உன்
அன்பு மழையை விடவா
இந்த மழை என்னை
நனைத்துவிடப் போகிறது!

457
தனிமை விடை பெற்றது.
இனிமை இடம் பெற்றது.

458.
வினாடி நேரமே திறந்தேன் மனதை,
விரைந்து குடியேறிவிட்டாய்.

459
படம் பிடித்தேன்
மழையை மனதில்;
நீ வரா நாட்களில்
நினைத்துப் பார்த்திட.

460
உன்னைச் சுற்றிப் பொழியும் மழை என்
அன்பைச் சொல்வது கேட்கிறதா?

><><

3 comments:

ரிஷபன் said...

தேன் துளிகள் !

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை. ரசித்தேன்.

Nagendra Bharathi said...

அருமை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!