Saturday, May 13, 2017

அவள் - கவிதைகள்


401.
தெரிந்துகொள்ளத் துடிக்கிறேன்
தென்றல் உன் காதில் சொன்ன சேதி.

 402.
அழகை புவி ஈர்ப்பதில்லை போல..
அதனாலோ உன் கால்கள்
தரையில் படுவதில்லை?

403.
சந்தித்த நாளின் 
எந்தக் கணத்தைத் தொட்டாலும்
சிலிர்க்கிறது.

404
உன் கன்னங்களில் நீந்தும்
என் எண்ணங்கள்
கரையேறுகின்றன இதழோரமாய்.

405.
தெளித்திடும் பன்னீரில்
தெறித்திடும் மணம் போல
உன் பேச்சில் அன்பு...

406.
ஓடி ஓடிச் சென்று நிற்க முயலுகிறேன்
உன் மனம் செல்லும் இடங்களில்.

407.
எப்படிக் காட்சியளிக்க முடிகிறது
என்றும் புதிதாக?

408.
முதல் தேதி போல
நீ எனக்கு.
முப்பது நானுனக்கு.

409.
எத்தனையோ சத்தம்.
ஊஹூம்!
என் ஒரு சிறு கிசுகிசுப்பு
விழித்துக் கொள்கிறாய்.

410
தொடுவானத்துக்கு அப்பாலும்
நீள்கிறது உன் 
நினைவு.
><><

3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாமே அருமை!!

Nagendra Bharathi said...

அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

உன் கன்னங்களில் நீந்தும்
என் எண்ணங்கள்
கரையேறுகின்றன இதழோரமாய்.

அருமை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!