Friday, October 9, 2015

அவள் - (கவிதைகள்)

183

சற்றுத் தேடி வருகிறேன்
என் சகியை என்று
கிளம்பிப்போன நெஞ்சம்
கிடைக்கவேயில்லை
திரும்ப எனக்கு.


184
உன்னை அழைத்தால்
ஏன் திரும்பிப் பார்க்கின்றன
பூக்கள்?


185
தொட்டதும் திடுக்கிட்டுத்
திரும்புகிறேன்
யாருமில்லை.
தொட்டது இதயத்தை நீ.

186.
முன்னே படர்ந்திருக்கும்
வார்த்தைக் குவியலில்
உனக்கான வார்த்தைகளை
தேர்ந்தெடுக்கிறேன்
பூத்தொடுப்பது போல.

187.
கண்கள் அவளுடையவை.
காந்தம் கண்களுடையவை
என்கிறாள்.

188.
எத்தனை எளிதாய் இருக்கிறது
இதயத்தைக் கழற்றி
உன்னிடம் தந்துவிட்டு
கைவீசி நடப்பது!

189
பிரியத்தின் 
பிரியம்
நீ.

-)()()()(-
(படம் - நன்றி: கூகிள்)

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

எத்தனை எளிதாய் இருக்கிறது
இதயத்தைக் கழற்றி
உன்னிடம் தந்துவிட்டு
கைவீசி நடப்பது!

அருமை அற்புதம்
நன்றி நண்பரே
தம +1

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!