Friday, October 3, 2014

யுக்தி...


ருகில் வந்த மனைவி யமுனா கேட்டாள்.
''நீங்க போகிறது உங்க பிரமோஷன் இண்டர்வியூவுக்கு. ஒரு நாள் தான் அங்கே இருக்க முடியும். அங்கே இருக்கிற உங்க சித்தப்பா மகன் முருகேஷை அவன் வேலை பார்க்கிற கம்பெனியில் போய்ப் பார்க்கணும். நேரத்துக்கு ரயிலைப் பிடிச்சுத் திரும்பணும். இத்தனை வேலைக்கிடையில் வருணையும் கூட்டிட்டுப் போய் என்ன பண்ணப் போறீங்க? அவன் படிப்பு வேற பாழாகும்.''
''எல்லாம் காரணமாத்தான் அழைச்சிட்டுப் போறேன். வந்ததும் பாரு,'' என்றார் சுப்புராம்.
ன்டர்வியூ முடிந்ததும் டைடல் பார்க் சென்றார்கள். அகன்ற லிஃப்டில் உயர்ந்து அந்த கம்ப்யூட்டர் கம்பெனியில் பிரவேசித்தார்கள்.
ஏ.சி. நாசியை வருடிற்று. அசத்தலான க்யூபிகள்களில் பிரபுக்கள் போல அமர்ந்து வண்ணத் திரைகளுடன் உறவாடி அமரிக்கையாக பிராஜெக்டுகளைப் படைத்துக் கொண்டிருந்த இளைஞர்களை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே வந்தான் வருண். ஒவ்வொரு விஷயமாக முருகேஷிடம் கேட்க அவன் விளக்க, இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை இவனுக்கு.
த்து நாட்களுக்குப் பின்...
'என்னங்க, வருண் ஆளே மாறிவிட்டான். இப்பல்லாம் முன்னைவிட நல்லா படிக்கிறான். நல்ல மார்க் வாங்கி முருகேஷ் வேலை பார்க்கிறது மாதிரி ஒரு பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியில் சேரப் போகிறானாம். யோசனையோடுதான் செயல் பட்டிருக்கீங்க!''
கணவரைப் பாராட்டினாள் யமுனா.
(01-08-2007 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
><><><

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

பிரமிப்பூட்டும் சிந்தனை..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கதை. ஏற்கனவே தாங்கள் ஒருமுறை இதனை வெளியிட்டு நான் படித்துள்ளதாக எனக்கு ஞாபகம் உள்ளது.

ரிஷபன் said...

நல்ல யுக்தி

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கதை நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

ஹ ர ணி said...

அன்புள்ள ஜனா.

வணக்கம். நான் நினைத்த முடிவுதான் என்றாலும் இதனை சற்று விரிவாக எழுதியிருக்கவேண்டிய அருமையான கதை.இனி சுருக்கி எழுதாதீர்கள். அன்பு வேண்டுகோள் இது.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கதை. சொல்லிப் புரிய வைப்பதை விட அனுபவத்தில் புரிந்து கொள்ளச் செய்வது நல்லது....

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!