Sunday, January 26, 2014

நல்லதா நாலு வார்த்தை... 24


'மகிழ்வுடன் கற்பது
மறப்பதில்லை ஒருபோதும்.'
-Alfred Mercier
('What we learn with pleasure
we never forget.')
<>

  
'இசை கேட்கையில் எந்த
இடருக்கும்அஞ்சேன்.
எதிரி எவரும் காண்கிலேன்.
ஊறுபடா நிலையடைகிறேன்.
அந்தக் காலத்துக்கும் சரி,
இந்தக் காலத்துக்கும் சரி
சொந்தக்காரனாகிறேன்.'
- Thoreau
('When I hear music, I fear no danger.
I am invulnerable. I see no foe. I am related
to the earliest times and to the latest.')
<>

'நாலு துளியேனும்
நம் மேல் விழாமல்
நாம் மற்றவர் மீது
தெளிக்க முடியாத  பன்னீரே
மகிழ்ச்சி என்பது!'
 -Emerson
('Happiness is a perfume you cannot pour on
others without getting a few drops on yourself.')
<>
 
'செயலைப்போல் விரைவில்
கவலையைக் குறைப்பது இல்.'
 - Walter Anderson
('Nothing diminishes anxiety faster than action.')
<>


'இயற்கையைக் கூர்ந்து பார்,.
இன்னும் நன்றாய்ப் புரிந்துகொள்வாய்
எல்லாவற்றையும்!'
-Albert Einstein
('Look deep into nature and then you will
understand everything better.')
<>


'வெற்றியைப்போல்
வெற்றியடைவது
வேறொன்றிலை.'
- AlexanderDumas
('Nothing succeeds like success.')
<>


'களிப்புடன் அளிப்பவர் உண்டு, அந்தக்
களிப்பே அவர்களின் வெகுமதி.'
- Khalil Gibran
('There are those who give with joy,
and the joy is their reward.')
 
<<<>>>
(படம் - நன்றி: கூகிள் )

10 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

கூர்ந்து பார்ப்பது உட்பட அனைத்தும் அருமை...

வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

மகிழ்வுடன் கற்பது மறப்பது இல்லை ஒரு போதும்
உண்மை. அனைத்தும் அருமை.
நன்றி.

ராமலக்ஷ்மி said...

பொன்மொழிகளும் தமிழாக்கமும் அருமை. நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

'மகிழ்வுடன் கற்பது
மறப்பதில்லை ஒருபோதும்.'

மகிழ்வுடன் பகிர்ந்த அருமையான
பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

தி.தமிழ் இளங்கோ said...


இந்த பதிவினில் இன்று எனைக் கவர்ந்த பொன்மொழி வாசகம்:

'இயற்கையைக் கூர்ந்து பார்,.
இன்னும் நன்றாய்ப் புரிந்துகொள்வாய்
எல்லாவற்றையும்!'
Look deep into nature and then you will
understand everything better. - - Albert Einstein

பகிர்விற்கு நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பொன்மொழிகள்! நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பொன்மொழிகள்! நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

அத்தனையும் அருமை.....

ADHI VENKAT said...

முதல் கருத்து முற்றிலும் உண்மை...

அனைத்தும் அருமை...பகிர்வுக்கு நன்றி சார்..

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!