Tuesday, October 1, 2013

நல்லதா நாலு வார்த்தை... 18

 
 
'தோல்வியிலிருந்து தோல்விக்கு, 
உற்சாகம் 
தொலையாமல் தாவுவதே வெற்றி.'
-Winston Churchill
('Success is stumbling from failure to
failure with no loss of enthusiasm.')
<<>>
'சொல்லவோ
சொல்லாமலிருக்கவோ 
இயலாததை, 
சொல்லுவது இசை.'
- VictorHugo 
('Music expresses that which cannot be said and on
which it is impossible to be silent.')
<<>>
'மிக நிச்சயமாய் இந்த 
மகா பிரபஞ்சத்தில் நாம் 
முன்னேற்ற முடியுமென்கிற 
ஒரே இடம்
நம்மிடம் தான்' 
-Aldous Huxley
('There is only one corner of the universe you
can be certain of improving and that is your own self.') 
<<>>
'தொட்டிடாததொரு 
அழகிய மலர் மணம், 
தோட்டத்தையே ஆனந்த
இடமாக்குவது போன்றது 
அன்பு.'
-Helen Keller
('Love is like a beautiful flower which I may not
touch, but whose fragrance makes the garden
a place of delight just the same.')
<<>>
'வாழ்க்கையை நேசிக்கிறோம் 
வாழப் பழகி விட்டதால் அல்ல,
நேசிக்கப் பழகி விட்டதால்!'
-Friedrich Nietzche
('We love life not because we are used to
living but because we are used to loving.')

<<>>
'ஒளி பரப்பிட
வழி இரண்டு: 
மெழுகுவர்த்தியாயிருப்பது 
அல்லது 
அதைப் பிரதிபலிக்கும் 
ஆடியாயிருப்பது.'
-Edith Wharton
('There are two ways of spreading light to
be the candle or the mirror that reflects it.')
<<>>
'உவப்பென்பது 
உரியவர்களாக இருப்பது 
உடையவர்களாக இருப்பதல்ல.'
- Elizabeth Harvey
('Happiness is belonging, not belongings.')
 
*******
(படம்- நன்றி : கூகிள்)
 
 

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'வாழ்க்கையை நேசிக்கிறோம்
வாழப் பழகி விட்டதால் அல்ல,
நேசிக்கப் பழகி விட்டதால்!'//

;)))))

அருமையான பொன்மொழிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

நிலாமகள் said...

முதலாவதும் கடைசி இரண்டும் தலையாட்ட வைத்தவை.

தி.தமிழ் இளங்கோ said...

பொன்மொழிகள் பகிர்வுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

நேசிக்கப் பழகுவதும், வெற்றியும் மிகவும் ரசித்தேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

கவியாழி said...

மனசுக்கு இதமாய் இருக்கிறது.நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

'தொட்டிடாததொரு
அழகிய மலர் மணம்
தோட்டத்தையே ஆனந்த
இடமாக்குவது போன்றது
அன்பு.'

மணம் கமழ்ந்து மனம் நிறைக்கும் வரிகள்..பாராட்டுக்கள்..!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான மொழிகள்...

முன்னேற்றம் நம்மிடம் தான்.... - நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.

Anonymous said...

மொழிபெயர்ப்பு அருமை.
கடைசியானதை வெகுவாக ரசித்தேன்.

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - பொன்மொழிகள் நன்று - மொழி பெயர்ப்பினிற்கும் பகிர்வினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

கோமதி அரசு said...

தொட்டிடாததொரு
அழகிய மலர் மணம்,
தோட்டத்தையே ஆனந்த
இடமாக்குவது போன்றது
அன்பு.'

வாழ்க்கையை நேசிக்கிறோம்
வாழப் பழகி விட்டதால் அல்ல,
நேசிக்கப் பழகி விட்டதால்!'//

அன்பாய், நேசிக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கை சொர்க்கம் தான்.
அருமையான பொன்மொழிகள் பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!