Sunday, October 20, 2024

நற்றமிழ் அறிவோம்... 1


 “...அந்த விழாவுக்கு நீலகண்டனையோ அல்லது கலியமூர்த்தியையோ அழைக்கலாம் என்று இருக்கிறேன்.”

அடிக்கடி கேட்கிற மாதிரி ஒரு வாக்கியம் தான், ஆனால் யோசிக்கிறோமா?
‘நீலகண்டனையோ கலிய மூர்த்தியையோ’ என்றாலே இருவரில் ஒருவரை என்று பொருள் வந்து விட்ட பிறகு ‘அல்லது’ எதற்கு?
அல்லது ‘அல்லது' என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும் என்றால் ‘நீலகண்டன் அல்லது கலியமூர்த்தியை’ என்றால் போதுமே?
'அந்த விழாவுக்கு நீலகண்டனையோ கலியமூர்த்தியையோ அழைக்கலாம் என்று இருக்கிறேன்,' என்பதே சரி.
(நகைக்க: மேற்படி வாக்கியத்தை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் ‘I am planning to invite EITHER Neelakandan OR OR Kaliyamoorthy for the function என்றல்லவா வரும்?)
><><
All reactions:
Kumari Amudhan, Lakshmikanthan Lakshmikanthan and 2 others

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தொடக்கம். தொடர்கிறேன்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!