Friday, December 23, 2022

போதும் யுகத்துக்கு...

 அமுத சு ரபி...

அவர்தானா அது? திகைக்க வைக்கும் இன்னொரு அமுதக் குரலைத் தன் ’ஏற்கெனவே மதுரக் குரலு’க்குள் வைத்திருக்கிறார் ரஃபி.


‘Woh Jab Yaad Aaye..’ பாடலை அவர் பாடியிருக்கும் லாவகம்! லக்ஷ்மிகாந்த் பியாரிலால் முதல்முதலாக இசையமைத்து இசையுலகைக் கலக்கிய படத்தில். (’பாரஸ்மணி’)
அதே 1963 இல் வெளியான இந்தி நெஞ்சில் ஓர் ஆலயத்தில் (தில் ஏக் மந்திர்) அதே ரஃபி பாடிய ‘Yaad Na Jaaye…’வில் அந்த மதுரக் குரலைக் கேட்டு மனம் கசிந்து முடிப்பதற்குள் இதில் அசந்துபோனோம்.
முகமது ரஃபி. மென்குரல் அமுத சுரபி... இன்று பிறந்த நாள்.
இந்திப் படவுலகின் பொற்காலம் அதன் இசைக் கோலம். அதன் பெரும் பகுதியின் டாப் ஸிங்கராக அவர். சுண்டியிழுக்கிற அந்தக் குரலை வர்ணிக்க ‘மெஸ்மரைசிங் வாய்ஸ்’ என்றால் ஸர்ப்ரைசிங்காக இருக்காது.
ஷம்மி கபூருக்கும் பாடுவார். ஜானி வாக்கருக்கும் ஏற்பப் பாடுவார். அவர்தான் முகமது ரஃபி. ‘கும்நாம்’-இல் ”ஹம் காலே ஹை தோ கியா ஹுவா..”வில் மெஹ்மூதுக்கு ‘சித்தாடை கட்டிக்கிட்டு..’ ஸ்டைலில் பாடி விளாசியதை மறக்கமுடியுமா? "The she I love is a beautiful, beautiful dream come true…” என்று அதை அசத்தலாக ஆங்கிலத்திலும் பாடியிருந்தாரே..
டூயட்டில் ரெண்டொரு வரிதான் தனக்கு என்றாலும் இமேஜ் பார்க்காமல் இசை துவட்டுவார். “Aankhen Hi Aankhen Mein Ishara Ho Gaya..”’ பாடலில் பல்லவி மட்டுமே அவருக்கு. என்ன ஸ்டைலாக அதை நம் காதுக்கு வழங்கினார்!
‘யாஹூ’ என்கிற வார்த்தை பிரபலமடைந்தது இவரது அந்த பாடலினால். (Junglee) தொடர்ந்து ‘Professor’ ‘Evening in Paris’ ‘Kashmir ki Kali’ என்று ஷம்மி கபூரின் ஆஸ்தான வாய்ஸ் ஆகிக் போனார்.
‘அவர் இல்லாமல் என் பாடலே இல்லை!’ சொன்ன ஓ.பி.நய்யார் ஒருமுறை இவர் ரெக்கார்டிங்குக்கு லேட்டாக வந்தார் என்ற வருத்தத்தில் இவருக்கு பாடல் தருவதை நிறுத்தி விட்டார். ‘Tumsa Nahin Dekha’ ‘Aar Paar’ ‘Ek Musafir..’ படப் pop பாடல்களைக் கேட்ட நமக்கு அந்த pep சரியான நஷ்டம். வேதனை தந்த மற்றொரு பிரிவு ரஃபி - லதா டூயட்ஸ்.
“Chahungha Main Tujhe…” இவர் பாடும்போது கூடவே விரைந்தோடும் நம் மனம். லஷ்மி பியாரியின் உயிர்த்துடிப்பான பாடல்களுக்கு உடல் கொடுத்தது இவர் குரல்.
பின்னால் இவரை ஓவர்டேக் செய்த கிஷோர் குமாருக்கு ஆரம்ப காலத்தில் குரல் கொடுத்திருக்கிறார். Shararat… இல் வரும் “Ajab Hai…” ஒரு முத்து.
அந்தப் பதினான்காம் நாள் நிலவை யாரால் மறக்க முடியும்? “Chaudwin Ka Chand Ho…” முதல் பிலிம்பேர் அவார்ட். மறுபடி ரவியின் இசையில் ‘நீல் கமல்' பாடலுக்கு முதல் நேஷனல் அவார்ட். (“Babul Ki Duvayen Lethi..”)
டூயட் பாடல்களில் கிசு கிசுக்கிற தினுசில் ஓர் அன்னியோன்யம் தோன்றும் என்றால் சோகப் பாடல்களில் மனதைப் பிழிகிற உருக்கம் மிஞ்சி நிற்கும்.
ஓய்ந்து விட்டார் என நினைக்கையில் ‘நான் யாருக்கும் இளைத்தவர் இல்லை ‘ படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடி அவர் யாருக்கும் இளைத்தவர் இல்லை என்று கண்டு (கேட்டுக்) கொள்ள வைத்தார். ('Hum Kisise Kum Nahin')
“துஜே மைன் சாந்த் கஹ்தா தா..” என்று எழுந்து, “மகர் உஸ் மேம் பி தாக் ஹை...’ என்று இறங்கி, “துஜே இத்னா ஹி கஹ்தா ஹூன்…” என்று ஆர்ப்பரித்து “தும்ஸே பியார் ஹை.. தும்ஸே பியார் ஹை..” என்று மெல்ல அடங்கும்போது அந்த சங்கர் ஜெய்கிஷன் பாடலை ஒரு சாட்டையாக சொடுக்கி நம் பிளஸ் வைஜயந்தியின் உணர்வுகளைக் கட்டிப் போடும் அழகு!
ஒரு ரஃபி தான். போதும் யுகத்துக்கு.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!