Sunday, August 3, 2014

நட்பின் தினம்.


நம்மை நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர்களை
நாம் நினைக்கவே இந்த
நட்பின் தினம்.

நன்றியும் நவில்வோம்
நல்கிய இறைவனுக்கு…

நட்பெனும் படகிலேறி
நாட்களைக் கடப்போம்
நகர்வதில் களிப்புடன்…

விட்டுபோன நட்புக்களில்
தொட்டு உயிர்ப்பிப்போம்
ஒன்றையேனும்...

பழகும் நட்புகளுடன்
பகிர்ந்திடுவோம்
பழைய நினைவுகளை…

நட்புக்கொள்ள நபரின்றி
பற்றிக்கொள்ள கொம்பின்றி
வாடும் உயிரொன்றுக்கு
நட்பாய் உதவுவோம்…
நாமின்று.

>>><<<

(படம்- நன்றி: கூகிள்)

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

நட்பு தின நல்வாழ்த்துகள்.!

பால கணேஷ் said...

அழகிய நட்புக் கவிதை. வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

கோமதி அரசு said...

நட்பு கவிதை அருமை.
நட்புக்கொள்ள நபரின்றி
பற்றிக்கொள்ள கொம்பின்றி
வாடும் உயிரொன்றுக்கு
நட்பாய் உதவுவோம்…
நாமின்று.//
நீங்கள் சொல்வது நல்ல விஷ்யம்.


பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் இருப்பவர்களிடம்
இனிமையாக பேசினாலே போதும்
வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

விட்டுபோன நட்புக்களில்
தொட்டு உயிர்ப்பிப்போம்
ஒன்றையேனும்... // :)

வெங்கட் நாகராஜ் said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.....

சிறப்பான கவிதை.

கரந்தை ஜெயக்குமார் said...

நண்பர் தின வாழ்த்துக்கள்
நண்பரே

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!