Thursday, September 10, 2026
பிரபல பஞ்ச் டயலாக்...
Sunday, September 6, 2026
பால்வெளியின் வான்மதி...
Tuesday, September 1, 2026
சொல்லாமல் கொள்ளாமல்...
சொல்லாமல் கொள்ளாமல்…
கே.பி.ஜனார்த்தனன்
காலிங் பெல் ஒலித்தது. எட்டிப் பார்த்தார் ராகவ். கேட்டுக்கு வெளியே கிஷோர் நின்றிருந்தான். சற்று தாமதமாகவே கதவைத் திறந்தார்.
“என்ன மாமா, என்ன பண்ணிட்டிருந்தீங்க? எத்தனைவாட்டி பெல்லை அமுத்துறது?”
“இல்லேடா, இங்கே ஒரு பேஜார் வேலையில் அகப்பட்டு முழி பிதுங்கிட்டிருக்கேன். உட்காரு, என்ன தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?”
அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கு முன் ”ஆ, உன்கிட்ட ஐடியா கேட்கலாமே? ஒரு வெப்சைட் போட்டி. பக்கத்து வீட்டு பையன் என்னை கலந்துக்கச் சொன்னான். ரெண்டே வரியில் எழுதணும் ‘To whom do you want to thank before you die and why?’ அப்படிங்கிற கேள்விக்கு பதில். எப்படி எழுதறதுன்னு தலையை பிச்சிட்டு…”
“ஓ வந்து… அது இப்ப…”
“ஒரு நிமிஷம்தான். இந்த கேள்விக்கு நீ பதில் சொல்றதாயிருந்தா என்ன சொல்லுவே?”
யோசிக்கவேயில்லை. “எங்க அம்மாவுக்குத்தான் முதல்ல! லிஸ்ட் போட முடியாது அவங்க எனக்கு செய்திருப்பதை எல்லாம்! அப்புறம் எங்கப்பா..” என்று அவனாகவே அப்பாவுக்குத் தாவினான், “அவர் மட்டும் அந்த காலத்திலேயே எனக்கு அட்வென்ச்சர் கதைகளை படிச்சுக் காட்டவில்லையானால் நான் படிப்பில் இத்தனை ஆர்வத்தோடு வளர்ந்திருக்க மாட்டேன்.”
“அப்ப யாழினி?”
“ஆமாம். முதலிலேயே சொல்லியிருக்கணும். என் மனைவி இல்லாம நான் ஏது? அடுத்து என் தங்கை. அவளோட பாசம் நான் முன்னேற எத்தனை உதவியா இருந்திருக்கு! என் ப்ரண்ட் சீதாராமன். பிளஸ் டூவில் என் ஹை மார்க் ஸ்கோருக்கு அவனுக்கு நன்றி சொல்லணும். ராப்பகலா கூட இருந்து உழைச்சான்…”
அவன் தொடர்ந்து சொல்ல… மாமா உட்கார்ந்தார்.
“இலக்கணமும் கணக்கும் சொல்லித் தந்த ஆறுமுகம் சார், வேலையில் சேர்ந்தப்ப முதல் ப்ராஜெக்ட் லீடரா இருந்த மனோஜ் … கொஞ்சம் கஷ்டம்தான் மாமா. லிஸ்ட் வளந்துட்டேயிருக்கு. ஆஹா, எத்தனை பேர் என் வாழ்க்கையில் நான் நல்லாயிருக்க ஹெல்ப் பண்ணியிருக்காங்க? ஏன் உங்களால் அதை ஈசியா எழுத முடியலைன்னு புரியுது.” என்ன நினைத்தானோ, “வரேன் மாமா, வீட்டில் ஒரு வேலை, மறந்துட்டேன்!” போய்விட்டான்.
போன் ஒலித்தது. “சித்தப்பா,” என்று அழைத்தாள் யாழினி. ”அங்கே வந்தாரா அவர்? என்னோட சண்டை போட்டுட்டு கோபத்தில் வெளியே போனாரு. அதான் கவலையா இருக்கு.”
“கவலைப்படாதே, இப்ப சரியாகியிருப்பான். அங்கேதான் வந்திட்டிருக்கான்,” என்றார் அவன் முகத்தில் அறிகுறி பார்த்து நோயை டயாக்னிஸ் செய்து உடனடியாக ஒரு திரைக்கதை எழுதி அதன்படி வைத்தியமும் பார்த்து அனுப்பிய ராகவ்.
(‘அமுதம்’ April 2012 இதழில் வெளியான ‘அன்புடன் ஒரு நிமிடம் -3’)
Sunday, August 30, 2026
அதுவும் அன்றே ...
Saturday, August 29, 2026
வள்ளலாக வாழ்ந்தவர்...
கலைவாணர்! .. கடைசி வரை வள்ளலாகவே வாழ்ந்தவர்.
><><><
Friday, August 28, 2026
மின்னல் போலாகும் ...
Monday, August 24, 2026
வாழ்க்கை என்பதே...
Sunday, August 23, 2026
முழுமையாக ஒரு வார்த்தை...
முழுமையாக ஒரு வார்த்தை...
கே.பி.ஜனார்த்தனன்
(’அமுதம்’ ஏப்.2012 இதழில் வெளியான 'அன்புடன் ஒரு நிமிடம்-2')
"என்ன ஞாபகம் வெச்சாலும் spelling மறந்துடுது!” அலுத்துக் கொண்டான் பரசு, “Complimentary, Complementary இந்த ரெண்டு வார்த்தையும் குழப்புது என்னை.”
“ரொம்ப சுலபம்,” என்றார் வாசு. அப்பா. ”Complimentary என்பது வாழ்த்துவது. Complementary ன்னா முழுமையாக்குவதுங்கற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete. அதனால Comple என்று L-க்கு பதிலாக E வருது, அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே? தவிர அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றையொன்று முழுமையாக்குவது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்கவேண்டும். அப்பதானே அழகு? பயன்?"
சுவாரசியம் தட்டிற்று இவனுக்கு.
”கணவனும் மனைவியும் எடுத்துக்கொண்டால் இவனிடம் இல்லாத சில நல்ல குணங்கள் அவளிடமும் அவளிடமில்லாத சில அவனிடமும் என அமைந்தால் அந்த அளவில் அது Complementary தானே?"
"கண்டிப்பா."
"கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்ததில் Complementary ஆக அமைந்திருந்ததால் குழந்தைகளுக்கு வாழ்வில் அதுவே அவர்களின் மாபெரும் இயங்கு முன்னேற்றத் தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கிவைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary- யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிற மாதிரி. பாட்டி பழமொழியில் தொடங்கி பக்திப் பாடல் படிக்க வெச்சு ப த நி ச வரை சொல்லிக் கொடுப்பார். சித்தப்பா இலக்கணம், மாமா பேட்மிண்டன்... எல்லாம் ஒரே இடத்தில் நடந்திரும். இப்ப நாம அவனை அழைச்சிட்டு நீச்சல் கிளாஸ், மியூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு பேட்டைவிட்டு பேட்டை அலையறோம்...’
”அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?”
”அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?”
கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள்.. ’ஆஹா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! இனி நல்லதுதான் நடக்கும்.’
><><
Saturday, August 22, 2026
வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான...
Aug. 23. பிறந்த நாள்!
><><><
Wednesday, August 19, 2026
பறப்பது வசீகரமானது...
Tuesday, August 18, 2026
The One Better..
Sunday, August 16, 2026
எதிர்பாராத இசை...
Friday, August 14, 2026
முழுமையாக ஒரு வார்த்தை...
முழுமையாக ஒரு வார்த்தை...
கே.பி.ஜனார்த்தனன்
(’அமுதம்’ ஏப்.2012 இதழில் வெளியான 'அன்புடன் ஒரு நிமிடம்-2')
"என்ன ஞாபகம் வெச்சாலும் spelling மறந்துடுது!” அலுத்துக் கொண்டான் பரசு, “Complimentary, Complementary இந்த ரெண்டு வார்த்தையும் குழப்புது என்னை.”
“ரொம்ப சுலபம்,” என்றார் வாசு. அப்பா. ”Complimentary என்பது வாழ்த்துவது. Complementary ன்னா முழுமையாக்குவதுங்கற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete. அதனால Comple என்று L-க்கு பதிலாக E வருது, அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே? தவிர அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றையொன்று முழுமையாக்குவது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்கவேண்டும். அப்பதானே அழகு? பயன்?"
சுவாரசியம் தட்டிற்று இவனுக்கு.
”கணவனும் மனைவியும் எடுத்துக்கொண்டால் இவனிடம் இல்லாத சில நல்ல குணங்கள் அவளிடமும் அவளிடமில்லாத சில அவனிடமும் என அமைந்தால் அந்த அளவில் அது Complementary தானே?"
"கண்டிப்பா."
"கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்ததில் Complementary ஆக அமைந்திருந்ததால் குழந்தைகளுக்கு வாழ்வில் அதுவே அவர்களின் மாபெரும் இயங்கு முன்னேற்றத் தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கிவைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary- யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிற மாதிரி. பாட்டி பழமொழியில் தொடங்கி பக்திப் பாடல் படிக்க வெச்சு ப த நி ச வரை சொல்லிக் கொடுப்பார். சித்தப்பா இலக்கணம், மாமா பேட்மிண்டன்... எல்லாம் ஒரே இடத்தில் நடந்திரும். இப்ப நாம அவனை அழைச்சிட்டு நீச்சல் கிளாஸ், மியூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு பேட்டைவிட்டு பேட்டை அலையறோம்...’
”அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?”
”அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?”
கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள்.. ’ஆஹா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! இனி நல்லதுதான் நடக்கும்.’
><><
சட்டென்று....
திரையின் அட்டகாசமான கேரக்டர்கள் கதாசிரியரால் define செய்யப்பட்டு, டைரக்டரால் refine செய்யப்பட்டு, நடிகர்களின் நடிப்பால் fine செய்யப்பட்டு நமக்கு ரசிக்கக் கிடைக்கிறது. ஆனால் வெகுசில கேரக்டர்களை நடிகர்கள் தங்கள் rare performance கொண்டு வேறு லெவலுக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள். எழுதியவர், இயக்கியவர், நடித்தவர் மூவரையும் தாண்டி அந்த கேரக்டர் தனியே நின்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகிறது.
Thursday, August 13, 2026
தெளிவைஸர்!...
Monday, August 10, 2026
எண்ணிச் சிந்திடுவோம்... (அன்புடன் ஒரு நிமிடம் -1)
அன்புடன் ஒரு நிமிடம் -1
வினோத் தன் லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்தான். “எத்தனை மணிக்கு முகூர்த்தம்? மண்டபம் எது?”
“பத்தரை. ஸ்ரீநிவாஸ் மண்டபம்.”
“முகூர்த்தம் பத்தரைக்குத்தானே? இப்ப அரைமணியில் ரெடியாயிட்டேன்னா ஒரு மணி நேரத்துல அங்க போயிடலாமே?” என்றான். அவன் தொடர்ந்து சொன்னது: “நான் என்ன சும்மா தூங்கிட்டா இருக்கேன்? ரெண்டு வாரமாச்சு. ப்ராஜெக்ட் வேலை முடியலை. அதைத்தான் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்.”
“சரி சரி, இட்லி ரெடியாயிருக்கு. எடுத்து சாப்பிட்டுக்குங்க. நான் டிரஸ் பண்ணிக்கிறேன்,” என்றாள் அவள். வேலை ரொம்ப பாக்கின்னா வீட்டிலிருந்து கொஞ்சம் பார்க்கலாமே என்று சொன்னது அவள்தான். ஆகவே அவளுக்கு உறுத்திற்று. நீ சொன்னதைத்தானே நான் செய்தேன் என்கிறானோ? அவள் தொடர்ந்து சொன்னது: “ஆமா, எங்க மாமா வீ டடு கல்யாணமாச்சே, அப்பத்தான் ப்ராஜெக்டைப் பார்க்கிறதுக்கு உட்காருவீங்க!”
“உடனே அப்படிப் போயிருமே நினைப்பு? அதெல்லாமில்லே,” என்று மறுத்தான். ஷேவிங்கை ஆரம்பித்தவன் தொடர்ந்து சொன்னது: “நீதான் சில சமயத்தில் அப்படி சிறுபிள்ளைத்தனமா நடந்துக்குவே, நானில்லை.”
இதற்குப் பிறகு இந்த உரையாடல் எப்படி போயிருக்கும் என்பதை ஊகித்து விடலாம்.
மேலே உள்ள உரையாடலில் எல்லா ‘தொடர்ந்து சொன்னது’களையும் கவனிக்கவும். அவற்றைச் சொல்லுமுன் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் ‘இப்ப இப்படிச் சொல்லணுமா? சொல்லலாமா? சொன்னால் அது என்ன எதிர் விளைவை அல்லது பக்க விளைவை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்த்துவிட்டு அப்படிச் சொல்லவா வேண்டாமா என்று முடிவு எடுத்திருந்தால் அநேகமாக அந்த எல்லா ‘தொடர்ந்து சொன்னது’களையுமே நிச்சயமாக தவிர்த்திருப்போம் இல்லையா? அந்த இடங்களில் அவை அவசியப்படவும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.
தான் சொல்வது சரி என்று வாதாடுகையில் ஒருவரை ஏதும் குறை சொல்லும் முன், அப்படிச் செய்திருக்கணும் என்று அறிவுரை வழங்கும் முன், ஒரு நிமிடம் நாம் என்ன சொல்கிறோம் என்பதை யோசித்துவிட்டுப் பேசினால் உறவுகளும் நட்புகளும் எப்போதும் இனிக்குமே? எண்ணிச் சிந்திடுவோம் எண்ணங்களை…!
(‘அமுதம்’ ஏப். 2012 இதழில் வெளியானது)















