Showing posts with label குறுங்கதை. Show all posts
Showing posts with label குறுங்கதை. Show all posts

Tuesday, August 18, 2026

The One Better..


The One Better.. (One minute story)

K.B.Janarthanan

"It's either Kannan or Madhavan, sir, for the team leader," said the manager, "We have to fix who."
"OK," said Parasuram, the Managing Director, "What's your opinion? Tell me about Kannan first."
"M.B.A plus M.S... Hard-working... Has the experience of about fifty projects."
"Good."
"And what's unique about him, he's never come to me seeking advice or suggestion in the midst of any project."
"Splendid. Now what about Madhavan?"
"He's also hard-working... M.B.A and M.S... Fifty or so projects."
"Go on."
"One difference. He'd come to me often enough seeking suggestions, telling about the errors made," said the manager.
He was sure the M.D. would select Kannan.
But Parasuram said, "OK, Send the order to Madhavan."
"Sir?"
"I can see you're surprised. Look at it this way. Team leaders should be efficient, no doubt. But it is equally important that they should be trustworthy. Men who consult with us at phases, though they make some mistakes, are much better than persons going about their way and managing on their own."
"True," said the manager.

Saturday, June 20, 2026

‘சும்மா’வா சொன்னாங்க…


‘சும்மா’வா சொன்னாங்க…
கே.பி.ஜனார்த்தனன்.

ரிடயரானதும் ஆனந்தம் பிடிபடவில்லை. ஆஹா ஜாலி! இனி ஃப்ரீ! 24 மணியும் நமக்கேன்னு நினைத்தபடி மாமாவைப் போய்ப் பார்த்தேன். “ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா!” என்றேன்.
“அட, ரிடயராயிட்டியா? இனிமேதான் கவனமா இருக்கணும். ஐடிலா இருக்கவேபடாது. நோய் வந்துரும். உடனே போய் ஒரு சோஷியல் கிளப்பில சேர்ந்துரு. ஆக்டிவிடி! அதான் மருந்து!” என்று அட்வைஸை வழங்கினார் ஆசியாக, ஆசையாக.
என்னடா இதுன்னு அண்ணாவைப் பார்க்கப் போனேன். “என்னிக்கு ரிடயரானே?”
“போனவாரம்..”
“ஒரு வாரமா எங்கே போனே? சும்மாவா இருந்தே?”
“இப்பதானேண்ணா சும்மா இருக்க முடியும்?”
“இப்பதான் படாது. சுறுசுறுப்பா இருக்கணும். இல்லன்னா உடம்பு கெட்டுடும். அதனால நீ என்ன பண்றே, நாளைக்கே என் கடையில ஜாயின் பண்ணிரு. வேணா உன்னை ஒரு 10% பார்ட்னரா போட்டுக்கறேன்.”
“பிசினஸ்லாம் எனக்கு வராதே?”
“அதனால தான் உன்னை போடறேன், இல்லன்னா கவிழ்த்துருவேல்ல?”
எப்படியோ நழுவி வந்து மனைவியிடம் சொன்னபோது… “நான்கூட படிச்சேங்க… சும்மாவே இருக்கப்படாதாம். சுகர் வந்துருமாம்.. உங்களுக்குத்தான் மேத்ஸ் நல்ல வருமே? நம்ம தெருவிலேயே பத்து பதினஞ்சு பசங்க தேறுவாங்க.. டியூசன் சொல்லித் தரலாமே.. வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு…” என்று இடியை இறக்கினாள், “நாலு காசு வந்தால் நாலு புடவை எடுக்கலாமில்ல? உங்களுக்கு ஒரு வேட்டி…”
எனக்கு தெள்ளத் தெளிவா விளங்கிப் போச்சு. மறுநாளே போய் எங்க எம் .டியைப் பார்த்தேன்.
“என்ன சொல்றே, ஏதாவது வேலை வேணுமா?”
“ஆமா, காண்ட்ராக்டில் சில வேலைக்கு ஆள் எடுக்கிறீங்கல்ல? அது மாதிரி.”
“அது இப்ப… நல்ல வேலை ஒண்ணும்… செக்யூரிடி வேலை மட்டும்தானே காலியாயிருக்கு. வந்து சும்மாதான் இருக்கணும்!"
“போதும்!” என்றேன், ரொம்பவே செக்யூர்டாக உணர்ந்தேன்.
><><

Monday, September 30, 2024

அவள் போட்ட கணக்கு…


அவள் போட்ட கணக்கு…

கே. பி. ஜனார்த்தனன்
பரக்கப் பரக்கத் தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் ராஜி. டாக்டர் ரவிசங்கரின் அந்த இ.என்.டி. கிளினிக்கில் வேலை அவளுக்கு. வருகிற பேஷண்டுக்கு சீட்டு எழுதி டோக்கன் கொடுக்கணும்.
கொஞ்ச நேரம் தாமதம் ஆனாலும் டாக்டர் கோபித்துக் கொள்வார். பங்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் அவருக்கு.
தவிப்பாக இருந்தது மனதில். வீட்டில் தம்பி ரவி தனியே இருப்பான். “அக்கா, அக்கா இந்த நாலு கணக்கை போட்டு முடிக்கிற வரையாவது கூட இரேன்,” என்று கெஞ்சினான். டாக்டரின் கோபப் பார்வை கண்ணில் வந்து நிற்க உதறிவிட்டு ஓடிவந்தாள்.
கணக்கு என்றாலே அவனுக்கு சிம்ம சொப்பனம். ஆனால் புத்திசாலி. பக்கத்தில் இருந்து கொஞ்சம் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தினால் போதும், மளமளவென்று போட்டு விடுவான் எல்லா கணக்கையும். கணக்குதான் என்றில்லை, ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம் எதுவானாலும் சற்றே அவள் ஊக்குவித்தால் சாதித்து விடுவான். தாய் இல்லாத பையனுக்கு அக்காதான் எல்லாம். குடிகார அப்பாவை தலைவராக கொண்ட ஏழைக் குடும்பத்தின் பிரதிநிதியாக வேலைக்கு வந்தவள் ஆயிற்றே அவள்?
ஆனால் இரவு 9 மணி வரை கிளினிக்கில் இருக்க வேண்டும் அவள். அது மட்டுமா? இங்கே இன்னொரு பிரசினை இருந்தது.
“ஹாய் ராஜி!” என்ற குரல் நாராசமாய் ஒலித்தது காதில். வந்துவிட்டது அந்த பிரசினை.
ஒரு ஸ்டூலைத் தூக்கி அவள் எதிரில் போட்டு அமர்ந்து கொண்டான் மதன். டாக்டரின் மைத்துனன் அவன். “என்ன இன்னிக்கு ரஷ் ஏதும் இல்லை, ஃப்ரீயா தான் இருக்கே போல?”
ராஜி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏதாவது பேஷண்ட் வந்தாலாவது இவன்கிட்டேயிருந்து தப்பிக்கலாம்.
“ஒரு ஜோக் சொல்லட்டுமா? கேட்டவுடனே சிரிப்பு வந்திரும்…” என்று தொடங்கினான்.
இவன் தான் அந்த இன்னொரு பிரசினை. டாக்டரின் மைத்துனன் என்ற உரிமையில் தினமும் அங்கே ஆஜராகி விடுவான். பி.பி.எம். முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருப்பவன். பெரும்பாலும் பெண்கள் பின்னால்.
வந்து உட்கார்ந்தான் என்றால் அவளை அசத்துவதற்காக அதையும் இதையும் பேசி... அதுவும் கூட்டம் இல்லை என்றால் அந்த தனிமையை உபயோகித்து ரொம்ப தாராளமாக பேச ஆரம்பித்து விடுவான். டாக்டர் மனைவியின் செல்லத் தம்பியாச்சே, இவனைப் பற்றிப் புகார் செய்தால் இருக்கிற வேலையும் போய்விடுமே என்கிற கவலை அவளுக்கு.
அந்த நேரம் இரண்டு நோயாளிகள் வந்து விட, அவனிடமிருந்து தற்காலிகமாக விடுதலை கிடைத்தது. அப்போதுதான் அந்த யோசனை மனதில்… டாக்டரின் அறையில் நுழைந்தாள். தான் கேட்க வந்ததை மெல்லக் கேட்டு விட்டாள்.
“அதற்கென்ன, ஓகே!” பச்சைக்கொடி காட்டிவிட்டார் அவர்.
^^ ^^ ^^
மறுநாள் மாலை. கிளினிக்கில்…
“ஏழாவது கணக்கை போட்டுட்டியா? சூப்பர்! இப்ப எட்டாவதைப் பார்த்து ஸ்டெப் எழுது,” என்று தம்பிக்கு சொல்லிக் கொண்டு அடுத்த டோக்கனை எடுத்து வைத்தாள் ராஜி. பக்கத்தில் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து பாடத்தை எழுதிக் கொண்டிருந்தான் ரவி.
“ஹாய்!” என்று உள்ளே நுழைந்த மதன் இந்த திடீர் சூழ்நிலை மாற்றத்தால் தாக்குண்டு அதிர்ந்து நின்றான்.
தன் தம்பியையும் தன்னுடன் அழைத்து வந்து ஒரு ஓரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொள்ள பெர்மிஷன் கேட்டு வாங்கி ஒரே ஐடியாவில் இரண்டு பிரசினைக்கு தீர்வு கண்டுபிடித்துவிட்ட தன் சாதுரியத்தை தனக்குள் வியந்து கொண்டாள் ராஜி.