Thursday, February 6, 2020

மௌஸுக்கு ஒரு மவுசு!


கம்ப்யூட்டருக்கும் மனிதருக்கும் இடையே புகுந்த 'எலி' இவருடையது. 
இன்றைக்கு நாம் விரல் அசைவில் முழு உலகத்துடனும் தொடர்பு கொண்டு தகவல் பரிமாறிக்கொண்டு மொத்த அறிவால் யோசிக்கத் தலைப்பட்டுள்ளோம் என்றால் காரணமானவர்களில் முக்கியமானவர் இவர்.
Douglas Engelbart. (1925 - 2013) Jan. 30 பிறந்த நாள்.
பெருகி வரும் உலகப் பிரசினைகளைச் சமாளிக்க, தீர்வு காண ஒரு கூட்டுச் சிந்தனை வேண்டும் என்று மனித குலத்துக்காக கனவு கண்டார் இவர். இறங்கினார் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு. வருடம் 1950.
சும்மா மனிதனின் வேலையைக் குறைப்பதை மட்டும் தன் வேலையாக வைத்திருந்த, உறங்கிக் கொண்டிருந்த, கம்ப்யூட்டரை உசுப்பினார். நமக்கும் அதற்கும் நேரடி தொடர்பை உண்டாக்க முயன்றார்.
பஞ்ச் கார்டிலிருந்து கம்ப்யூட்டர்களை விடுவித்து, இப்ப நீங்க இதை எத்தனையாவது விண்டோவிலிருந்து படிக்கிறீங்க, இந்த லெவலுக்கு கொண்டுபோனதிலும் சரி, யூஸர் இண்டர்ஃபேஸையும் நெட்வொர்க்கையும் நம் உலவு களமாக்கியதிலும் சரி, இவர் பங்கு கணிசம். mouse-ஐ நம் கையில் கொடுத்தார்.
கருவிகளின் திறனை அதிகரிப்பதற்காக கருவிகளின் திறனை அதிகரிப்பதில் மனிதர்கள் தம் நேரத்தைச் செலவிட்டால் நம் முன்னேற்றம் ஜெட் வேகமெடுக்கும் என்ற இவர் கம்ப்யூட்டர் சயின்ஸில் வழங்கப் படுவதில் ஆகப்பெரிய அவார்டான A M Turing Award வாங்கியது 1997 இல்.
><><><