Thursday, April 9, 2026

புரியாத, புதிர் இல்லை...

ஒரு புதிர்.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர் தாத்தா, தானே கணிதமும் வானியலும் பயின்று தன்னை ஆசிரியராக்கிக் கொண்டார் என்றால் பேரன் என்ன கற்றுக் கொண்டிருப்பார்?
ஆமா, புதிர்களை உருவாக்குவதே அவர் ப்ரொஃபெஷனாயிற்று.
அவர் புரியாத, புதிர் ஒன்று இல்லை.

அவர் Henry Dudeney.. இன்று பிறந்த நாள். (1857)
புதிரெழுத ஆரம்பித்த வயது 9. புனை பெயரைப் (Sphinx) போலவே சிங்கம்தான் அதில். ஏன், உலகின் முதல் 'நம்பர் க்ராஸ்வர்ட்' இவர் தயாரித்ததுதான். தவிர, செஸ்ஸில் லேசில் செக் சொல்லமுடியாத 'கிங்'!
அக்காலத்தில் பிரபலமானது Haberdasher’s Puzzle. ஒரு சமபக்க முக்கோணத்தை 4 துண்டுகளாக வெட்டி ஒரு சதுரமாக்க வேண்டும், எப்படி? செய்து காட்டி Royal Societyயில் அப்ளாஸ் வாங்கினார்.
ஏற்கெனவே பிரபலமாயிருந்த Sam Loyd உடன் பழகி அவருக்கு அனுப்பிய புதிர்களை அவர் ஏன் தன் பேரில் வெளியிட்டார் என்பது 'புரியாத புதிர்' இவருக்கு.
டிட்பிட்ஸிலிருந்து ஸ்ட்ரேண்ட் மேகசைன் (30 வருஷம்) வரை புதிர் சப்ளை செய்த இவர் ஆர்தர் கானன்டாயிலின் நண்பர்.
'வார்த்தை - எண் புதிர்' இவர் ஸ்பெஷாலிடி. எழுத்துக்களான எண்களைக் கண்டு பிடித்தால் கணக்கு சரியாயிருக்கணும். இதோ ஒன்று.
S E N D +
M O R E
__________
M O N E Y
முடிகிறதா (அல்லது விடையை கமெண்டில்) பாருங்கள்!
ஒரு நல்ல பஸிலை தீர்க்க புத்தி கூர்மை, கணிதம், லாஜிக் மூன்றும் தேவை என்கிறார். கணிதத்தின் வளர்ச்சியில் puzzle solving முக்கியமான பங்கு வகிப்பதாயிற்றே?
புத்திசாலித்தனமாக குழந்தைகள் வளர அவர்களுக்கு புதிர்களில் ஆர்வத்தை ஏற்படுத்தலாமே?

Wednesday, February 18, 2026

16 வயதினிலே ...


16 வயதினிலே லேசான சினிமா ஆர்வத்துடன் ‘Andaz’ பட ஷூட்டிங் பார்க்க ஸ்டூடியோவுக்குள் நுழைந்த பெண்ணை, 'Barsaat' பட ஷூட்டிங்கிலிருந்த ராஜ் கபூர் பார்க்க, 'கண்டேன் என் ரெண்டாவது கதாநாயகியை!' என்று sign up செய்தார். இப்படியாக "ஜீயா பேகரார் ஹை ..." என்ற All India Hit பாடலைப் பாடிக்கொண்டே நுழைந்தார் படவுலகில்.
நிம்மி! கம்மியின்றி அழகை ஆண்டவன் அள்ளிக் கொடுத்த நிம்மி! இந்தித் திரையுலகின் முதல் அழகுப் பதுமை எனச் சொல்லலாம் இவரை. அப்பாவி கிராமப் பெண் வேடத்துக்கு அபாரமாக பொருந்தும் முகம். Incidentally, ‘குமுதம்' படத்தின் ரீமேக் 'Phooja Ki Phool’ -இல் சௌகார் வேடத்தில் இவரே.
லதா மங்கேஷ்கர் தமிழில் முதல் முதலாக பாடிய பாட்டு நினைவிருக்கிறதா? "நீ எந்தன் கண்ணாளன்.. கரை நோக்கி போகிறாய்..." (அந்த "தையாரே தையர..”)
படத்தில் அந்தக் காட்சியில் நிம்மி, என்னவொரு முகபாவம்! படம் 'Uran khatola'. (தமிழில் 'வானரதம்' திலீப் குமார்.)

நாம தான் சுத்திட்டு ...


நம்பளைத் தான் எல்லாம் சுத்திக்கிட்டு இருக்குதுன்னு நாமல்லாம் நினைச்சிட்டிருக்கும்போது, நாம தான் சுத்திட்டு இருக்கிறோம்னு நமக்குச் சொன்ன ஆளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்!
Nicolaus Copernicus... (1473 - 1543)
ஆம், பூமிதான் தன்னைத்தானேயும் சூரியனையும் சுற்றுவதை சுட்டிக் காட்டினார். அந்த Heliocentric theory யை எழுதி முடிக்க அவர் செலவிட்டது கிட்டத்தட்ட அரை வாழ்நாள்! கொடுத்து விட்டு மறைந்து விட்டார். ஆமாம் அது புத்தகமாக வெளியான வருடம் தான் அவரது கடைசி வருடம். அதற்கு முன்பிருந்த அரிஸ்டாட்டில், தொலமி (Ptolemy) இருவரின் கருத்துக்களும் தடம் புரண்டன.
அப்பப்பா என்று ஆச்சரியப்பட வைத்தவரை வானியலின் அப்பா என்றதில் ஆச்சரியம் இல்லைதான். முன்னரே சிலர் அதைக் கோடி காட்டியதுண்டு என்பார்கள். சந்தேகங்களையும் கிளப்பாமல் இல்லை. சூரிய மண்டலத்துக்கு மட்டுமல்ல, பிரபஞ்சத்துக்கே மையம் சூரியன் என்று அவர் குறிப்பட்டது ஒன்று.
கலிலியோ, நியூட்டன், கெப்லர் எல்லாம் இவரைக் கொண்டாடி இருப்பாங்க மனசிலே, அவங்க தொடர்ந்து நடந்து செல்ல பாதை போட்டவர் ஆச்சே!
சந்திரனில் கிடக்கும் பென்சிலைப் பார்க்கிற அளவுக்கு இப்ப நம்ம கிட்ட டெலஸ்கோப் இருக்கு. ஆனால் அவரிடமிருந்த டெலஸ்கோப் அவருடைய இரண்டு கண்கள்தான். ஆமா, நாம் வெறுமே பார்த்த ஆகாயத்தை அவர் வேறு மாதிரி பார்த்தார்.
போலந்தில் வானியலும் ஜோதிடமும் கணிதமும் படித்துவிட்டு இத்தாலிக்கு வந்தார். அங்கே பிரபலமாயிருந்தார் நோவேரா. அவர்தான் வருடா வருடம் வானிலையும் நாட்டின் நிலையையும் கணித்துச் சொல்ல வேண்டும். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டவர் விரைவிலேயே நல்ல பிரபலம் ஆனார். சீசரின் ஜூலியன் காலண்டர் வடிவமைக்க இவரிடம் ஆலோசிக்கிற அளவுக்கு. சமீபத்தில ஒரு தனிமத்துக்கு இவரு பேரை இட்டாங்க. Copernicium.
சொன்னாரு பாருங்க ஒண்ணு:
'நமக்கு என்ன தெரியும் என்பது நமக்குத் தெரிந்திருப்பதும், நமக்கு என்ன தெரியாது என்பது நமக்குத் தெரிந்திருப்பதும் தான் உண்மையான அறிவு.'