இந்த அருமை வாசகம் சொன்னவர் John Calvin ( 1509 - 1574) பிரெஞ்சு தத்துவ ஞானி. இன்று பிறந்த நாள்!
இன்னும் நிறைய முத்துக்களை உதிர்த்திருக்கிறார்.
‘ஒருவர் எந்த மாதிரி இருந்தாலும் அவரை நாம் நேசிக்க வேண்டும், ஏனெனில் நாம் கடவுளை நேசிக்கிறோம்.’
‘எல்லா மனிதர்களுமே சந்தோஷத்தை தேடுகிறார்கள், ஆனால் நூற்றில் ஒருவன் கூட அதை கடவுளிடம் தேடுவதில்லை.’
‘உண்மையைத் தியாகம் செய்து வாங்க வேண்டியது அல்ல அமைதி.’
‘அடக்கம் என்பது உண்மையான அறிவின் தொடக்கம்.’
‘மனிதனின் அழிவுக்கு நிச்சயமான வழி அவன் தனக்குக் கீழ்ப்படிவதுதான்.’
‘பிரார்த்தனை விஷயங்களை மாற்றாது; கடவுள் மாற்றுகிறார் நம் பிரார்த்தனையின் பதிலாக.’
'கடவுளை அறிந்து கொள்வதில் தொடங்காமல் எந்த அறிவும் இல்லை.'
‘செல்வத்தால் கண்கள் மறைக்கப்படுவதைவிட ஆபத்தானது வேறேதுமில்லை.’
‘நம் நம்பிக்கை குறைவாக இருக்கும்போது அது அதிகரிக்கவும், உறங்கிக் கிடக்கும் போது விழிக்கவும், ஊசலாடும் போது அதை உறுதிப்படுத்தவும், பலவீனமாக இருக்கும்போது பலப்படுத்தவும், தூக்கி எறியப்படும் போது அதை எடுத்து வளர்க்கவும் செய்யும்படி கடவுளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.’



