Wednesday, February 18, 2026

16 வயதினிலே ...


16 வயதினிலே லேசான சினிமா ஆர்வத்துடன் ‘Andaz’ பட ஷூட்டிங் பார்க்க ஸ்டூடியோவுக்குள் நுழைந்த பெண்ணை, 'Barsaat' பட ஷூட்டிங்கிலிருந்த ராஜ் கபூர் பார்க்க, 'கண்டேன் என் ரெண்டாவது கதாநாயகியை!' என்று sign up செய்தார். இப்படியாக "ஜீயா பேகரார் ஹை ..." என்ற All India Hit பாடலைப் பாடிக்கொண்டே நுழைந்தார் படவுலகில்.
நிம்மி! கம்மியின்றி அழகை ஆண்டவன் அள்ளிக் கொடுத்த நிம்மி! இந்தித் திரையுலகின் முதல் அழகுப் பதுமை எனச் சொல்லலாம் இவரை. அப்பாவி கிராமப் பெண் வேடத்துக்கு அபாரமாக பொருந்தும் முகம். Incidentally, ‘குமுதம்' படத்தின் ரீமேக் 'Phooja Ki Phool’ -இல் சௌகார் வேடத்தில் இவரே.
லதா மங்கேஷ்கர் தமிழில் முதல் முதலாக பாடிய பாட்டு நினைவிருக்கிறதா? "நீ எந்தன் கண்ணாளன்.. கரை நோக்கி போகிறாய்..." (அந்த "தையாரே தையர..”)
படத்தில் அந்தக் காட்சியில் நிம்மி, என்னவொரு முகபாவம்! படம் 'Uran khatola'. (தமிழில் 'வானரதம்' திலீப் குமார்.)

நாம தான் சுத்திட்டு ...


நம்பளைத் தான் எல்லாம் சுத்திக்கிட்டு இருக்குதுன்னு நாமல்லாம் நினைச்சிட்டிருக்கும்போது, நாம தான் சுத்திட்டு இருக்கிறோம்னு நமக்குச் சொன்ன ஆளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்!
Nicolaus Copernicus... (1473 - 1543)
ஆம், பூமிதான் தன்னைத்தானேயும் சூரியனையும் சுற்றுவதை சுட்டிக் காட்டினார். அந்த Heliocentric theory யை எழுதி முடிக்க அவர் செலவிட்டது கிட்டத்தட்ட அரை வாழ்நாள்! கொடுத்து விட்டு மறைந்து விட்டார். ஆமாம் அது புத்தகமாக வெளியான வருடம் தான் அவரது கடைசி வருடம். அதற்கு முன்பிருந்த அரிஸ்டாட்டில், தொலமி (Ptolemy) இருவரின் கருத்துக்களும் தடம் புரண்டன.
அப்பப்பா என்று ஆச்சரியப்பட வைத்தவரை வானியலின் அப்பா என்றதில் ஆச்சரியம் இல்லைதான். முன்னரே சிலர் அதைக் கோடி காட்டியதுண்டு என்பார்கள். சந்தேகங்களையும் கிளப்பாமல் இல்லை. சூரிய மண்டலத்துக்கு மட்டுமல்ல, பிரபஞ்சத்துக்கே மையம் சூரியன் என்று அவர் குறிப்பட்டது ஒன்று.
கலிலியோ, நியூட்டன், கெப்லர் எல்லாம் இவரைக் கொண்டாடி இருப்பாங்க மனசிலே, அவங்க தொடர்ந்து நடந்து செல்ல பாதை போட்டவர் ஆச்சே!
சந்திரனில் கிடக்கும் பென்சிலைப் பார்க்கிற அளவுக்கு இப்ப நம்ம கிட்ட டெலஸ்கோப் இருக்கு. ஆனால் அவரிடமிருந்த டெலஸ்கோப் அவருடைய இரண்டு கண்கள்தான். ஆமா, நாம் வெறுமே பார்த்த ஆகாயத்தை அவர் வேறு மாதிரி பார்த்தார்.
போலந்தில் வானியலும் ஜோதிடமும் கணிதமும் படித்துவிட்டு இத்தாலிக்கு வந்தார். அங்கே பிரபலமாயிருந்தார் நோவேரா. அவர்தான் வருடா வருடம் வானிலையும் நாட்டின் நிலையையும் கணித்துச் சொல்ல வேண்டும். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டவர் விரைவிலேயே நல்ல பிரபலம் ஆனார். சீசரின் ஜூலியன் காலண்டர் வடிவமைக்க இவரிடம் ஆலோசிக்கிற அளவுக்கு. சமீபத்தில ஒரு தனிமத்துக்கு இவரு பேரை இட்டாங்க. Copernicium.
சொன்னாரு பாருங்க ஒண்ணு:
'நமக்கு என்ன தெரியும் என்பது நமக்குத் தெரிந்திருப்பதும், நமக்கு என்ன தெரியாது என்பது நமக்குத் தெரிந்திருப்பதும் தான் உண்மையான அறிவு.'

Thursday, February 12, 2026

இடைவேளை வரை ...


இவரைப்போல் ரசிகர்களின் வெறுப்பையும் விருப்பையும் சம்பாதித்தவர் கிடையாது.ஏனெனில் இவரின் திரை வரலாறு இடைவேளை வரை வில்லனாக.. அப்புறம் நல்லவராக. சில சமயம் கதாநாயகனைவிட!
பிரான்... குணசித்திர நடிப்பில் எவரும் கிட்ட வரான். பிறந்த நாள் இன்று!
புகைப்படக் கலை பயில்வதற்காக சிம்லா உயரம் சென்றவர் அங்கே கிடைத்த வாய்ப்பில் நடிகராகி எவரெஸ்ட் ஏறினார். 1960 களில் அனேகமாக யார் ஹீரோ என்றாலும் இவர் தான் வில்லன் என்றிருந்தது. இவரையும் தேவ் ஆனந்தையும் பிரபலமாக்கிய படம் ஒன்றே: 'Ziddi.'(1948)
ஷம்மி கபூரோ ஜாய் முகர்ஜியோ, தேவ் ஆனந்தோ திலீப் குமாரோ யார் ஹீரோவானாலும் வில்லன் இவர்தான் என்றிருந்தது 60 களில்! ஒற்றை பிரபல வில்லனாக கோலோச்சிய காலம்!
ராஜ்குமார் மறுத்துவிட, பிரமாதமா வசனம் பேச வேண்டிய தன் ஹீரோ ரோலுக்காக பிரகாஷ் மெஹ்ரா, தேவ் ஆனந்தையும் தர்மேந்திராவையும் அணுகிக் கொண்டிருந்தபோது, இவரைப் போடுங்க என்று பிரான் சொன்னதால் நமக்குக் கிடைத்தவர் அமிதாப்! படம் ‘Zanjeer’
இவருள்ளிருந்த காமெடி நடிப்புத் திறமையை வெளிக் கொண்டுவந்த படம் 'Victoria No 203.' அசோக் குமாருடன் அடிக்கும் லூட்டி!
'ஹீரோ'க்களுக்கு உதவக்கூடிய 'வில்லனை'ப் பார்த்திருக்கிறீர்களா? 'மேரா நாம் ஜோக்கர்' எடுத்து நொடித்துப்போன ராஜ் கபூர் 'பாபி' எடுக்க நினைத்தபோது, பணம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு, அற்புதமாக நடித்துக் கொடுத்தாராம். அமிதாப் ஒரு முறை கஷ்டத்தில் இருந்தபோது அவருக்காக,தன் தள்ளாத வயதில் இரண்டு படங்கள் நடித்துக்.. ('Mrityudata', 'Tere Mere Sapne')
என்ன ஓர் நேய இதயம்! குலாம் மொஹம்மதுவுக்கு ('Pakeeja') பெஸ்ட் மியூசிக் டைரக்டர் அவார்ட் தரவில்லையென்று தனக்கான ஃபில்ம் ஃபேர் அவார்டை வாங்க மறுத்தார்.
2003 இல் பத்ம பூஷன்..2013 இல் பால்கே விருது.
மறுபடி பிறந்தால் பிரானாகவே பிறக்க வேண்டும் என்பாராம், அந்தளவு மகிழ்ச்சியாக வாழ்ந்த திருப்தியுடன்.