Sunday, August 2, 2026

அட்டகாச காமெடி ...


1940-ல் வந்த படம் என்று சொன்னால் என்றால் நம்ப மாட்டீர்கள்.
ஆனால் ‘I Love You Again’ -ன் அட்டகாச காமெடி கதை இது:
அமைதியான பிசினஸ்மேன் வில்சன். கப்பலில் வந்து கொண்டிருக்கிறான். தவறிக் கீழே விழப்போன ஆளைக் காப்பாற்றப்போய் தலையில் அடிபடுகிறது. அம்போன்னு மயங்கியவன் விழிக்கும்போது ஒன்பது வருட அம்னீஷியா விலகி முன்பிருந்த ஜார்ஜுக்கு வருகிறான். 9 வருட முன் ரயில் ஆக்சிடென்ட்டில் நினைவிழந்த ஜார்ஜ். ஜாலியான ஃபிராடு ஜார்ஜ்!
இப்ப இந்த 9 வருட வாழ்க்கை மறந்துவிட்டது. இப்போது தான் யார் என்று ‘தன்’ லக்கேஜைக் குடைந்து பார்த்தபோது பணக்கார பிசினஸ்மேன் வில்சன்னு தெரியுது. பேங்க் பாஸ்புக்கில் ஒன்றரை லட்சம் டாலர். ‘ஆஹா! பணத்தை அடித்துவிட்டு கம்பி நீட்டி விடலாம்!’
கரையில் இறங்கினால் ஒரு இளம்பெண் வரவேற்கிறாள். மனைவி!
அடுத்த ஜாக்பாட் ஆக தெரிகிறாள் அந்த அழகி. மனைவியாமே.. அடடா, பேர் கூட தெரியாதே? எதற்கோ Okay, Okay என்றிவன் சொன்னப்போ யெஸ் என்று அவள் திரும்பிப் பார்க்க, அவள் பெயர் Kay என்று தெரிகிறது. ‘இப்பேர்ப்பட்ட அழகியோட கணவனா நான்?’
ஆனால் அவளோ அவன் கையெழுத்துக்காக காத்திருக்கும் டைவர்ஸ் பேப்பரை நீட்டுகிறாள். 'டல்லான வெறும் பிசினஸ் மக்கு! யார் வாழ்வார்கள் அவனோடு?' அதான் காரணம். திகைத்தவன் ஒரு மாசம் டைம் கேட்கிறான். பேங்கில் போனால் அவனுக்கு அடுத்த அதிர்ச்சி. அந்த பணம் கம்யூனிட்டி ஃபண்டு. கை வைக்க முடியாது.
வேறென்ன கவிழ்க்க முடியும் தன் ‘மறுபதிப்பி'டமிருந்து? யோசிக்கிறான். ஏகப்பட்ட நல்ல பேர் இருக்கிறது வில்சனுக்கு. சொந்தமா கொஞ்சம் நிலமும்! நண்பன் டியூக் ஐடியா தருகிறான். ‘அந்த நிலத்தில் பெட்ரோல் இருப்பதாக நம்ப வைத்து ஏகப்பட்ட விலைக்கு விற்றுவிடலாம்!’
இங்கே கே-க்கு ஆச்சரியம். படு ஜாலியான கணவனைப் பார்த்து! பார்ட்டி என்ன, டான்ஸ் என்ன? கலக்குகிறான். கருமியா இருந்தவனா இப்படி? தடுமாறுகிறாள் தன் முடிவில்.
பெட்ரோலை வாங்கி நிலத்தில் கொட்டிவிட்டு, பணக்காரப் பசங்களை அந்த இடத்துக்கு டூர் அழைத்துச் செல்வது போல அழைத்து வந்து ‘தற்செயலாக’ பார்க்க வைக்கிறான். அப்பாக்கள் ஓடிவந்து போட்டி போட்டு (ட்யூக் வந்து விலையை ஏற்றிவிட) அபார விலைக்குப் பேசுகிறார்கள். ‘அப்பாடா, பணம் வந்ததும் ஓட வேண்டியதுதான் பாக்கி!' ஆனால் இப்ப அவனுக்கு டிலெம்மா. கூடி வாழவா, ஓடி அவளை இழக்கவா? கே தான் ஜெயிக்கிறாள் மனதில்.
ஆனால் ட்யூக் விடுவதாயில்லை. மிரட்டுகிறான். அவனை எதிர்க்கும்போது தலையில் அடிபடுகிறது ஜார்ஜுக்கு. மறுபடி பழைய வில்சனாகிறான். ட்யூக், கே ரெண்டு பேருக்குமே ஏமாற்றம். ட்யூக் தன் திட்டம் பலிக்காதே இனியென்று அகலுகிறான்.
இப்பதான் கே-க்கு ஐடியா ஃப்ளாஷ் ஆகிறது. ஆக, தலையில் அடிபட்டால் போதும், தன் 'அடுத்தது'க்கு ஸ்விட்ச் ஓவர் ஆகிவிடுவான் அவன்! அகப்பட்ட ஃப்ளவர் வேஸை எடுத்து ஓங்குகிறாள் அடிக்க. “ஐயையோ, நடிச்சேனாக்கும் நானு!" என்கிறான், மறுபடி அம்னீசியா வந்த மாதிரி நடித்த ஜார்ஜ்.
கே ஆக நடித்தவர் Myrna Loy... இன்று பிறந்த நாள்.



1940 இல் வந்த 'I love you again' எந்தளவு ஹிட் என்றால் இதே ஜோடியை வைத்து இதே போன்ற கதையில் அடுத்த படம் எடுக்கிற அளவுக்கு. படத்துல வர்ற எல்லா ஜோக்குகளும் கிடைக்கணும்னா, நீங்க படத்தை ரெண்டு தடவை பார்க்கணும்னு ட்ரெய்லர் சொல்லும்.
பிரபல Clark Gable -உடன் பல படங்களில் நடித்தவர். 1936 -இல் அவரை சினிமாவின் கிங், இவரை க்வின் என்று சொன்னாங்க. தன் வசீகரத்துக்கு முக்கிய காரணமாக ஒளிப்பதிவாளர்களை நன்றியுடன் கைகாட்டுவார்.
சொன்னார் பாருங்க, நச்சென்று ஒரு Quote!
‘Life is not a having and a getting but a being and a becoming.’

நேருக்கு நேர்...


‘நேருக்கு நேர் எதிர் கொள்வதால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது ஆனால் நேருக்கு நேர் எதிர் கொள்ளாமல் எதையும் மாற்ற முடியாது.’
சொன்னவர் James Baldwin. (1924 - 87) அமெரிக்காவின் மிக முக்கிய நாவலாசிரியர், கவிஞர், பேச்சாளர். இன்று பிறந்த நாள்!
திரைப்படமாகிய இவரின் ‘If Beale Street Could Talk’ என்ற நாவல் ஆஸ்கார் அவார்ட் பெற்றது.
இன்னும் சொன்னவை:
‘கல்வியின் முரண் என்னவெனில் ஒருவன் கற்று விழிப்புணர்வு பெற தொடங்கியதும், தான் கல்விபெறும் சமூகத்தையே பரிசீலனை செய்ய தொடங்குகிறான்.’
‘மக்கள் தங்கள் வெறுப்புகளைப் பிடிவாதமாக சுமந்து கொண்டு திரிவதற்கு ஒரு காரணம் வெறுப்புகளில் இருந்து விடுபட்டால் வலிகளுடன் போராடவேண்டுமே என்பதால்தான்.’
‘நேசி, நேசிக்க விடு. அதைத் தவிர வேறு முக்கியமான விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன?’
‘மக்கள் சரித்திரத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சரித்திரம் மக்களிடம் சிக்கிக் கொள்கிறது.’
‘அறியாமை அதிகாரத்துடன் சேர்ந்து இருப்பதுதான் நீதிக்கு கிடைக்க இருக்கிற மிகக்கொடூரமான எதிரி என்பது நிச்சயம்.’
‘வறுமையுடன் போராட நேர்ந்த எவருக்குமே தெரியும் ஏழையாக இருப்பது எத்தனை விலை உயர்ந்த விஷயம் என்று.’
‘அவற்றை அணியாமல் நாம் வாழ முடியாது என்று நாம் பயப்படுகிற, அணிந்தாலும் கஷ்டம் என்று நமக்குத் தெரிகிற முகமூடிகளை அன்பு அகற்றிவிடுகிறது.’

Saturday, August 1, 2026

பதினெட்டைத் தாண்டாத...


‘Kaajal’ படத்தில் ஒரு துணைப் பாத்திரத்தில் வருவார் அந்த நடிகை. பத்மினிக்கும் அவருக்குமான காட்சிகளை பார்க்கும்போது (ரோஷமூட்டும் காட்சியில் இவர் சொல்லும் வசனம் ஒன்று பத்மினியின் காதுகளில் மட்டுமல்ல, பார்ப்போர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்) இணையான அழகும் நடிப்பும் உள்ள இவர் எப்படி இன்னும் பெரிய கதாநாயகி ஆகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. எண்ணி சில வருடங்களிலேயே most sought-after ஹீரோயின் ஆகிவிட்டார். திலீப் குமார், தேவ் ஆனந்த் ஜோடியாக நடித்ததோடு ராஜேஷ் கன்னாவோடு பத்துப் படங்களில் most successful ஜோடியாக.
Mumtaz…. 31 July பிறந்த நாள்! இனிய வாழ்த்துக்கள்!
அவரின் திரை வாழ்க்கையை மூன்று பருவமாக பிரிக்கலாம். 1. சாந்தாராம் படங்கள் (Stree, Sehra) உட்பட பெரிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தது... 2. பத்துப் பதினைந்து தாராசிங் படங்களில் ஹீரோயினாக வந்தது. 3. டாப் ஹீரோயினாக ஜொலித்தது.
நட்சத்திரம் ஆக்கிய படம் ‘Do Raaste’ துணை வேடம், சில காட்சிகள்தான் என்றாலும் நான்கு பாடல் காட்சிகள் அவருக்கு கொடுத்திருந்தார் இயக்குநர் Raj Khosla.
கலகலவென்று சிரிக்கும் அந்த innocent laughter.. சட்டென்று அகல விரியும் கண்கள்... பதினெட்டைத் தாண்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் முகம்... இதெல்லாம் அவருக்கே ஆன சில அடையாளங்கள்!
திலீப்குமாருடன் ‘மாந்தோப்பில் நின்றிருந்தேன்..’ இந்திப் பாடலுக்கு ‘ராம் அவர் ஷ்யாம்’ படத்தில் ஆடும்போதும் சரி, ’காஞ்சீரே.. காஞ்சீரே..’ என்று ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா'வில் தேவ் ஆனந்த் தேடும்போது ஆடைத் தொழிற்சாலைக்குள் ஒளிந்தோடும்போதும் சரி, அந்தப் பெரிய கதாநாயகர்களுடன் ரம்மியமாகக் காட்சியை பகிர்ந்து கொள்வார், Not to mention ‘பிரம்மச்சாரி’யில் ஷம்மி கபூருடன் ‘ஆஜ்கல் தேரே மேரே ப்யார்....’ என்ற அந்த அட்டகாச நடனம்!
ரிகார்டுகளில் ஒன்று ராஜேஷ் கன்னாவுடன் நடித்த எட்டுப் படங்களின் பிளாட்டினம் ஜூபிலி. நடிப்பில் கலக்கிய படம் அவருடன் ‘Aap Ki Kasam’ என்றால், முத்திரை பதித்த படம் சஞ்சீவ் குமாருடன் ‘Khilona’ (இந்தி எங்கிருந்தோ வந்தாள்). உச்சக் காட்சியில் ஞாபகம் இல்லையா, ஞாபகம் இல்லையா என்று ஒவ்வொன்றாகச் சொல்லி சஞ்சீவ்குமாரின் நினைவு நியூரான்களை ஆக்டிவேட் செய்ய பதைபதைப்புடன் கதறும் காட்சியில் ‘இதோ, இன்னொரு மீனாகுமாரி’யாகியிருப்பார். (Filmfare Award).
‘அரங்கேற்றம்’, படம் இந்தியில் அரங்கேற்றம் ஆனபோது (‘Aaina’), நடிப்புக்கு மற்றொரு நல்ல வாய்ப்பு.
ஆனால் பின்னி யெடுத்தது தேவ் ஆனந்தின் மனைவியாக ‘தேரே மேரே ஸப்னே’ யில் தான்! நடிகை ஹேமமாலினியுடன் பழகும் கணவனின் போட்டோ பார்த்து கோபத்தில் இருப்பார். கண்ணைக் கசக்கிக் கொண்டு அடுக்களையில். வீட்டுக்கு வரும் தேவ் அவள் பேச்சைப் பார்த்து, என்ன ஆச்சுன்னு கேட்டபடி அவளிடம் வர, அந்த சண்டைக்கிடையிலும், “ஷூவைப் போட்டுட்டு அடுக்களைக்குள்ளே வராதீங்க, ஆமா!”ன்னு கத்துவது ஓ, மறக்க முடியாத சீன்