16 வயதினிலே லேசான சினிமா ஆர்வத்துடன் ‘Andaz’ பட ஷூட்டிங் பார்க்க ஸ்டூடியோவுக்குள் நுழைந்த பெண்ணை, 'Barsaat' பட ஷூட்டிங்கிலிருந்த ராஜ் கபூர் பார்க்க, 'கண்டேன் என் ரெண்டாவது கதாநாயகியை!' என்று sign up செய்தார். இப்படியாக "ஜீயா பேகரார் ஹை ..." என்ற All India Hit பாடலைப் பாடிக்கொண்டே நுழைந்தார் படவுலகில்.
நிம்மி! கம்மியின்றி அழகை ஆண்டவன் அள்ளிக் கொடுத்த நிம்மி! இந்தித் திரையுலகின் முதல் அழகுப் பதுமை எனச் சொல்லலாம் இவரை. அப்பாவி கிராமப் பெண் வேடத்துக்கு அபாரமாக பொருந்தும் முகம். Incidentally, ‘குமுதம்' படத்தின் ரீமேக் 'Phooja Ki Phool’ -இல் சௌகார் வேடத்தில் இவரே.
லதா மங்கேஷ்கர் தமிழில் முதல் முதலாக பாடிய பாட்டு நினைவிருக்கிறதா? "நீ எந்தன் கண்ணாளன்.. கரை நோக்கி போகிறாய்..." (அந்த "தையாரே தையர..”)
படத்தில் அந்தக் காட்சியில் நிம்மி, என்னவொரு முகபாவம்! படம் 'Uran khatola'. (தமிழில் 'வானரதம்' திலீப் குமார்.)

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!