அப்புறம் எத்தனையோ பாடல்கள்! கேட்டதுமே ஆடுகிற மாதிரி.. மனசு துள்ளுகிற மாதிரி… அவருடைய தனி முத்திரை தெரிகிற மாதிரி…
‘தீனா’வில் அந்த “நீ இல்லை என்றால்….” ஆரம்பிக்கிற வேகமும் ஸ்தம்பித்தலாக முடிவதும்.. என்னவொரு சங்கீத அமர்க்களம்!
கேட்க ஆரம்பித்தால் மறுபடி, மறுபடி கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றொரு பாடல்..
“காதல் எந்தன் காதல்… என்ன ஆகும் நெஞ்சமே!
கானல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே..”
எங்கோ ஒரு உலகுக்கு அழைத்துச் செல்லும் பாடலல்லவா அது?
ஒரு மோர்சிங்கையும் நாகஸ்வரத்தையும் வைத்து விளையாடியிருப்பார் நம் நெஞ்சங்களில்! எனக்குத் தெரிந்து morsing ஐ இத்தனை tantalizing ஆக திரைப்பாடலில் யாருமே உபயோகித்ததில்லை.
(‘மூன்று பேர் மூன்று காதல்’)
தவிர என் நெஞ்சோடு கலந்துவிட்ட அந்தப் பாடல்..
நிறுத்தி நிறுத்தி இசையின் எட்டுத் திக்குக்கும் நம்மை இட்டுச் செல்லும் லாவகம்! உயர உயர தூக்கிச் செல்லும் சரணமும் அங்கிருந்து நம்மை மெதுவாக இறக்கிக் கொண்டு வரும் இசையும்!
“நெஞ்சோடு கலந்திடு உறவாலே…காயங்கள் மறந்திடு அன்பே..” (‘காதல் கொண்டேன்')
சரணம் முடிந்ததும் ஷெனாயா, கிளாரினெட்டா, ரெண்டுமா, தெரியாது. நெஞ்சைத் துளைத்துச் செல்லும்…
யுவன் ஷங்கர் ராஜா… இசைச் செடியின் ஒரு ரோஜா.
இன்று பிறந்தநாள்…
1 comment:
அப்பாவின் இசை கவர்ந்த அளவிற்கு மகனின் இசை என்னைக் கவர்ந்ததில்லை.
தகவல்கள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!