Friday, October 3, 2014
யுக்தி...
Tuesday, September 9, 2014
அணுகு முறை...
''வாத்தியார் என்ன சொன்னார்? பையன் ரொம்ப ஸ்லோன்னு சொன்னாரா?'' என்று கேட்டேன்.
''இல்லை.''
''அப்ப ஐன்ஸ்டீன் மாதிரி எல்லாம் வரமாட்டான்.''
''பையன் கணக்குல புலி.''
''அப்ப ஒரு பெஞ்சமின் ஃபிராங்லின் ஆகவும் முடியாது. ஏன்னா அவர் கணக்குல வெரி புவர்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நிறைய வருதா?''
''வரவே வராது.''
''சே, பெர்னார்ட்ஷா ஆகிறதுக்கும் சான்ஸ் இல்லே! கிளாசில் அடி மட்டத்துக்குப் போயிருந்தானா?''
''நெவர்.''
''போச்சு. எடிசன் ஆகிற வாய்ப்பும் இல்லே. சரி, அடிக்கடி ரொம்ப டல்லா இருப்பானா?''
''அப்படி நான் பார்த்ததே இல்லே.''
''அப்ப ஜேம்ஸ் வாட் மாதிரியும் வரமாட்டான் போல... ஒகே. உங்க கவலை நியாயமானது தான். இத்தனை பிரபல மனிதர்களின் ஒரு மைனஸ் பாயிண்டும் இல்லையே இவனிடம்?''
கையைப் பிடித்துக் கொண்டார் நண்பர். ''என் கண்ணைத் திறந்தீங்க... டேய் பிரனேஷ், இங்கே வாடா,'' என்றார் மிக மிக அன்பான குரலில், ''சாரிடா!''
(குமுதம் 14-02-2007 இதழில் வெளியானது)
><><><><
(படம் - நன்றி: கூகிள்)
Monday, April 7, 2014
அணுகு முறை...
''வாத்தியார் என்ன சொன்னார்? பையன் ரொம்ப ஸ்லோன்னு சொன்னாரா?'' என்று கேட்டேன்.
''இல்லை.''
''அப்ப ஐன்ஸ்டீன் மாதிரி எல்லாம் வரமாட்டான்.''
''பையன் கணக்குல புலி.''
''அப்ப ஒரு பெஞ்சமின் ஃபிராங்லின் ஆகவும் முடியாது. ஏன்னா அவர் கணக்குல வெரி புவர்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நிறைய வருதா?''
''வரவே வராது.''
''சே, பெர்னார்ட்ஷா ஆகிறதுக்கும் சான்ஸ் இல்லே! கிளாசில் அடி மட்டத்துக்குப் போயிருந்தானா?''
''நெவர்.''
''போச்சு. எடிசன் ஆகிற வாய்ப்பும் இல்லே. சரி, அடிக்கடி ரொம்ப டல்லா இருப்பானா?''
''அப்படி நான் பார்த்ததே இல்லே.''
''அப்ப ஜேம்ஸ் வாட் மாதிரியும் வரமாட்டான் போல... ஒகே. உங்க கவலை நியாயமானது தான். இத்தனை பிரபல மனிதர்களின் ஒரு மைனஸ் பாயிண்டும் இல்லையே இவனிடம்?''
கையைப் பிடித்துக் கொண்டார் நண்பர். ''என் கண்ணைத் திறந்தீங்க... டேய் பிரனேஷ், இங்கே வாடா,'' என்றார் மிக மிக அன்பான குரலில், ''சாரிடா!''
Wednesday, December 4, 2013
புதுச் சட்டை
''நான் அன்னிக்கே சொன்னேனே இவன் சரியில்லேன்னு... அவனுக்கு தோணற மாதிரி வேலை செய்யறான். நேத்து நாலு சட்டைக்கு அரை மணி நேரத்தில பட்டன் தைச்சு, காஜா போட்டுட்டான். இன்னிக்கு ஒரு சின்ன சட்டையை வெச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கான். ஊஹூம், இவன் தேற மாட்டான்.'' என்று அலுத்துக் கொண்டான் சண்முகத்தின் உதவியாளன் கிருஷ்ணன்.
''சரி, சரி! அதை நீ வாங்கி முடிச்சுடு. பாலு, கொடுடா அதை கிருஷ்ணன் கிட்டே.'' என்று இரைந்தார் சண்முகம்.
''வேணாங்க முதலாளி, இதோ முடிச்சிடறேன்,'' என்று இறைஞ்சிய பாலு, கொஞ்ச நேரத்தில் ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுக்க, காத்திருந்த வாடிக்கையாளர் வாங்கிகொண்டு விரைந்தார்.
அவர் போனதும் சண்முகம் இவனிடம், ''ஏண்டா இந்த சின்ன வேலைக்கே இத்தனை நேரம் எடுத்துக்கிட்டா நாளைக்கு நீயெல்லாம் எப்படிடா பெரிய டெய்லரா வரப்போறே?'' என்று அதட்டினார்.
''அது வந்துங்க... இதைச் சின்ன வேலையா நான் நினைக்கலீங்க. ஆறு மாச குழந்தைக்கான சட்டை இது. குழந்தை சட்டையை எப்பவும் வாயிலேதான் கொண்டு போகும். இல்லீங்களா? அப்ப பட்டன் கழன்று அதன் வாய்க்குள்ளே போயிடக்கூடாது இல்லையா? அதான் பட்டனை நல்ல அழுத்தித் தைச்சு காஜாவையும் ஸ்ட்ராங்காப் போட்டேன். அதான் கொஞ்சம் கூடுதலா நேரமாயிட்டுது. மன்னிச்சுக்குங்க'' என்றான் பாலு.
சண்முகத்தின் முகம் சட்டென்று கனிந்தது. அவன் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து சொன்னார். ''நிச்சயம் ரொம்பப் பெரிய ஆளா வருவேடா.''
(ஆனந்த விகடன் 2005 தீபாவளி மலரில் வெளியானது)
Monday, November 11, 2013
காரணம் நான் உன்...
அன்புள்ள சுந்தர்,
நீ சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு சென்றிருப்பதாக பழநி சொல்லித் தெரிந்து கொண்டேன். வெகு விரைவிலேயே மிகப் பெரிய டைரக்டராக வருவேன் என்று நீ சபதம் செய்திருப்பதாகவும் அவன் சொன்னான்.
வகுப்பை கட் அடித்துவிட்டு நீ எழுதும் கவிதைகளைப் பார்க்க நேர்ந்த போதே உனக்குள் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
'வானில் பறக்கும் மேகத்துக்குத் தெரியுமா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மயிலின் ஏக்கம்?' என்ற உன் கவிதையை நான் எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்திருக்கிறேன் தெரியுமா?
பொதுத் தேர்வைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் ராத்திரியெல்லாம் கண் விழித்து ஒரு நாடகம் எழுதினாயே, நினைவிருக்கிறதா? அதைப் படித்த போதே உனக்குள் ஒரு கதாசிரியனும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன்.
ஒரு பணக்காரப் பெண் ஏழை வாலிபனைக் காதலித்து அந்தக் காதலுக்காக தன்னுடைய எல்லா சுகங்களையும் இழந்து, கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்கிறாள் என்ற அந்தக் கதை சினிமாவாக எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகை ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.
உன் அக்காவின் கல்யாணம், அம்மாவின் தீராத நோய், குடும்பத்தின் பொருளாதார நலிவு என்கிற மாதிரி சின்ன சின்னப் பிரசினைகளைப் பற்றியெல்லாம் அனாவசியமாக நீ அலட்டிக்கொள்ளாதே! அதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். அதைவிட அவருக்கு வேறென்ன வேலை? நீ உன் பி.இ. படிப்புக்கான வேலையில் சேர்ந்துவிட்டாயானால் உனக்கான ஆஸ்கர் பரிசை நீ வாங்குவது எப்போது?
இப்படியெல்லாம் எழுதி உன்னை உற்சாகப் படுத்த வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே! காரணம் நான்...
உன் அன்புள்ள,
அப்பா.
<<<>>>
(13-02-2005 விகடனில் பிரசுரமானது. )
<<>>
(படம் - நன்றி: கூகிள்)
Thursday, April 19, 2012
சத்தம்

Friday, November 4, 2011
நலம் வாழ...
அடுத்த வாரம் பிறந்த நாள் மைதிலிக்கு. என்ன பரிசு வாங்குவது என் இனிய மனைவிக்கு? மண்டையை உடைத்துக் கொண்டேன்.
வாட்ச்? ஏற்கெனவே ரெண்டு இருக்கு. செல் போன்? காமிரா? எல்லாமே இருக்கு. இருக்கிற வசதிக்கு எது வாங்கிக் கொடுத்தாலும் அசர வைக்காது மைதிலியை.
புதுசா, உருப்படியா, மறக்க முடியாததாக...
அவள் ஷெல்ஃபைக் குடைந்தேன். ஆ, கிடைத்தது ஐடியா!
பிறந்த நாள் அன்று...
வாசலில் பைக் வந்து நிற்க, ''அய் வசந்தி! பார்த்து எத்தனை வருஷமாச்சு! எப்படிக் கண்டு பிடிச்சே என் அட்ரசை? பிறந்த நாளும் அதுவுமா டாண்ணு வந்து நிற்கிறியே! என்னங்க, இவள் தான் ஹைஸ்கூலில் என் டியர் சிநேகிதி. அப்புறம் சந்திக்கவே முடியலே...'' சந்தோஷத்தில் பரபரத்தாள் இவள்.
''நான் எங்கே கண்டு பிடிச்சேன்? எல்லாம் உன் கணவர் ஏற்பாடு தான்!'' என்றாள் வசந்தி.
என் பக்கம் திரும்பினாள் மைதிலி. ''மறக்க முடியாத பரிசுதான்!''
('குமுதம்' 11-06-2008 இதழில் வெளியானது )
Tuesday, September 13, 2011
மோதிரக் கை
''என்ன டைரக்டர் சார், உங்க குருநாதர் டைரக்டர் மாசிலாமணி இப்படி கமென்ட் அடிச்சிருக்கார் உங்க லேட்டஸ்ட் படத்தை?'' ஓடி வந்தான் அசிஸ்டன்ட் டைரக்டர் பழநி.
''என்ன, என்ன சொல்லியிருக்கார் என் மூணாவது படத்தை?'' ஆவல் பொங்கிற்று டைரக்டர் சுகந்தனுக்கு.
''காட்சிகளை இன்னும் விறுவிறுப்பாய் இப்படி இப்படி அமைத்திருக்க வேண்டும்னு எழுதி ஒரு குட்டு வெச்சிருக்கார் பாருங்க.''
''அப்படியா, சபாஷ்!'' துள்ளிக் குதித்தார் சுகந்தன்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''என்னங்க இது, உங்க முதல் படத்துக்கு கமென்ட் சொல்றப்போ பளிச்சென்று நல்லாயிருக்குன்னு ஒரே வார்த்தையில் சொன்னார். ஆனா நீங்களோ அவ்வளவுதான் சொன்னாரான்னு குறைப்பட்டுக்கிட்டீங்க.''
''எஸ்!''
''ரெண்டாவது படத்துக்கும் அதையே தான் சொன்னார். அப்பவும் நீங்க மூஞ்சியைத் தூக்கி வெச்சிட்டு அவ்வளவுதான் சொன்னாரான்னு கேட்டீங்க.''
''ஞாபகமிருக்கு.''
''இப்ப இந்தப் படத்தை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்னு கமென்ட் கொடுத்திருக்கார். இதுக்குப் போய் துள்ளிக் குதிக்கிறீங்களே?''
''ஆமா, ரொம்ப சந்தோஷப்படறேன். உடனே போன் போட்டு அவருக்கு சொல்லணும்,'' என்றார் முகம் மலர.
இன்னமும் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்த பழநிக்கு விளக்கினார், ''மடையா, என் குருநாதர் சொல்லுவார், எந்த நல்ல படமுமே நூறு பெர்சன்ட் சரியா வராது. அதிலும் இம்ப்ரூவ் பண்ண வழியிருக்கும்பாரு. ஸோ அப்படி என் படத்தை அவர் சொன்னால் நல்லா வந்திருக்குன்னு தானே அர்த்தம்? எந்த சஜெஷனும் கொடுக்கலேன்னா வெத்துப் படம்னு அர்த்தம். அதான் எனக்கு இப்ப சந்தோஷமாயிருக்கு, புரியுதா?"
Monday, June 6, 2011
இணைந்து நின்று...
''என்ன வசந்த்?'' என்று நோக்கினார் திருவேங்கடம். எம்.டி. ''சொல்லு.''
''இசட் கம்பெனிக்கு நாம் அனுப்பின என்ட்ரியை நிராகரிச்சிட்டாங்க.''
''ஓஹோ? இம்ப்ரூவ் பண்ணித் தரச் சொல்றாங்களா?''
''வரதன் அட் கம்பெனியோட கான்செப்டை தேர்ந்தெடுத்துட்டாங்க.''
''அட, நிஜமாவா?'' முகத்தில் ஆச்சரியம் காட்டினார்.
''ஆமா சார், எத்தனை பாடுபட்டுத் தயாரிச்சு அனுப்பினது?''
''ஆமாமா,'' என்றார் திரு உணர்ச்சியை முகத்தில் கொட்டியபடி, ''எனக்குத் தெரியாதா என்ன? காபி ரைட்டர் வினித் முதலில் ஒரு டிசைன் போட்டுக் கொடுத்தான். அது சரியில்லே, வேறே போட்டுட்டு வான்னு அனுப்பினே. அப்புறம் வரிசையா அவன் கொடுத்த மூணுமே போதுமான திருப்தி தரலே உனக்கு. அப்பால கதிர்வேலைப் போடச் சொன்னே. அந்த நாலுமே தேறலே. பிறகு ரங்கா போட்டுத் தந்த மூன்றில் கடைசியா ஒன்றை ஓகே செய்வதற்குள் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்டாய் நீ?''
''அப்படியிருந்தும் அந்த ஆட்கள் -- நேத்து முளைச்ச விளம்பர கம்பெனி -- ஆர்டரைக் கவ்விட்டுப் போயிட்டாங்களே சார்?''
''அது எப்படின்னு ஆச்சரியப்படறே இல்லே?''
''ரொம்ப பாஸ்! ஏதோ லக் தான்.''
''இதுலே ஆச்சரியப்பட ஏதுமில்லே வசந்த். அவர்களோட வொர்கிங் பாட்டர்ன் எப்படின்னு விசாரித்தேன். சீஃபிலிருந்து காபி ரைட்டர் வரை எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கான்செப்டாக டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு அம்சமா விருத்தி செய்து எல்லாருடைய பெஸ்டும் வர்ற மாதிரி ஒரு அட் தயாரிக்கிறாங்க. உங்களை மாதிரி தனித்தனியா உட்கார்ந்து ஒவ்வொன்றிலும் விமரிசனப் பார்வையை ஓட விடாமல் டீம் வொர்க் செய்யறாங்க. அதான் நம்மை தோற்கடிச்சிட்டாங்க. இனிமேலாவது...?''
''புரிகிறது சார்,'' என்றான் வசந்த்.
Wednesday, May 18, 2011
கனவு வீடு
![]() |
''என்ன பரமசிவம், உங்க பையன் போட்டிருக்கிற வீடு பிரமாதமா இருக்கே?'' கேட்டார் நண்பர் மாதவன்.
''ஆமாங்க, சின்னப் பிள்ளையா இருக்கிறப்ப அடிக்கடி சொல்லுவான், 'நான் வளர்ந்து பெரிய ஆளானதும் நம்ம ஊரில் பிரம்மாண்டமா ஒரு வீடு கட்டுவேன்'னு. இப்ப கட்டிட்டான்,'' என்றார் சிரித்தபடி.
''சென்னைக்குப் போய் பிரபல டைரக்டர் ஆனபிறகு உங்களைக் கண்டுக்கலேன்னு வருத்தப் படுவீங்களே அடிக்கடி, இப்ப நம்ம ஊர் தேடி வந்திருக்கிறான் உங்க பையன். இனி எல்லாம் சரியாயிரும்.''
''உங்க வாக்கு பலிக்கட்டும்!'' என்றார் பரமசிவம்.
அடுத்த மாதம்.
ஷூட்டிங் முடிந்ததும் வீடு செட்டைப் பிரித்துச் சென்றனர் படக் குழுவினர்.
ஏதோ கொஞ்ச நாளாவது மகனைப் பார்க்க முடிந்ததே என்று திருப்திப் பட்டுக்கொண்டார் அவர்.
/\/\/\/\/\
(குமுதம் 14-01-2009 இதழில் வெளியானது)
Saturday, May 7, 2011
மடிப்புகள்

கணவன் துணிகளுக்கு இஸ்திரி போடுவதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தாள் ராஜி.
எத்தனையோ பையன்களின் யூனிஃபார்ம் சட்டைகளை அயன் பண்ணித் தருகிற கணவனின் பெட்டியால் தங்கள் மகனின் யூனிஃபார்ம் சட்டையையும் ஒரு நாள் அயன் பண்ணி அதை அவன் ஜம்மென்று போட்டுக்கொண்டு போகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்பவும் போல பீறிட்டெழுந்தது.
ஆனால் ராமசாமிக்கு அதற்கெல்லாம் நேரமிருக்காது. எதிர் ஃபிளாட்களின் மொத்தத் துணிகளும் காலையிலேயே வந்து குவிந்து விடும்.
இன்றைக்கு எப்படியாவது விசுவின் சட்டையை அயன் பண்ண வைத்து விடணும் என்று தீர்மானித்தாள் ராஜி.
அவசரம் அவசரமாக இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த ராமசாமி, ''கடவுளே, போச்சு!'' என்று கத்தினான்.
''என்னங்க ஆச்சு?''உள்ளிருந்து ஓடிவந்தாள் ராஜி.
''பெட்டி முனை கீறி சட்டை கிழிஞ்சிட்டது. அடடா, இது அந்த டி த்ரீ ஃ பிளாட் கோவிந்தனோடது ஆச்சே! லேசில் விடமாட்டாரே?''
''கவலைப் படாதீங்கப்பா!'' என்றொரு குரல் கேட்டது. விசு.
''இது என் சட்டைதாம்பா. எப்படியோ அந்தத் துணிகளோடு சேர்ந்து விட்டிருக்கு!''
''அப்பாடா!'' பெருமூச்சு விட்டான் ராமசாமி. ''வேறே சட்டை போட்டுக்கடா. சாயந்தரம் அம்மா தைச்சுத் தந்துடுவா.''
காலையில் துணிகளோடு துணியாய் பையனின் சட்டையையும் செருகி வைத்திருந்த ராஜி, தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.
( 'குமுதம்' 07-02-2005 இதழில் வெளியானது )
Wednesday, April 13, 2011
கும்பிடப்போன தெய்வம்...

Thursday, December 30, 2010
புதுச் சட்டை

''நான் அன்னிக்கே சொன்னேனே இவன் சரியில்லேன்னு... அவனுக்கு தோணற மாதிரி வேலை செய்யறான். நேத்து நாலு சட்டைக்கு அரை மணி நேரத்தில பட்டன் தைச்சு, காஜா போட்டுட்டான். இன்னிக்கு ஒரு சின்ன சட்டையை வெச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கான். ஊஹூம், இவன் தேற மாட்டான்.'' என்று அலுத்துக் கொண்டான் சண்முகத்தின் உதவியாளன் கிருஷ்ணன்.
''நிச்சயம் ரொம்பப் பெரிய ஆளா வருவேடா.''
(ஆனந்த விகடன் 2005 தீபாவளி மலரில் வெளியானது)
Wednesday, December 8, 2010
அனுபவம்

''என்ன திடீர் கரிசனம்?'' வெகுண்டு கேட்டாள்.
விசாலம் பேசத் தெரியாமல் தவித்தாள்.
(குமுதம் 14-12-2005 இதழில் வெளியானது)
Tuesday, November 2, 2010
காரணம் நான் உன்..

அன்புள்ள சுந்தர்,
நீ சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு சென்றிருப்பதாக பழநி சொல்லித் தெரிந்து கொண்டேன். வெகு விரைவிலேயே மிகப் பெரிய டைரக்டராக வருவேன் என்று நீ சபதம் செய்திருப்பதாகவும் அவன் சொன்னான்.
வகுப்பை கட் அடித்துவிட்டு நீ எழுதும் கவிதைகளைப் பார்க்க நேர்ந்த போதே உனக்குள் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
'வானில் பறக்கும் மேகத்துக்குத் தெரியுமா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மயிலின் ஏக்கம்?' என்ற உன் கவிதையை நான் எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்திருக்கிறேன் தெரியுமா?
பொதுத் தேர்வைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் ராத்திரியெல்லாம் கண் விழித்து ஒரு நாடகம் எழுதினாயே, நினைவிருக்கிறதா? அதைப் படித்த போதே உனக்குள் ஒரு கதாசிரியனும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன்.
ஒரு பணக்காரப் பெண் ஏழை வாலிபனைக் காதலித்து அந்தக் காதலுக்காக தன்னுடைய எல்லா சுகங்களையும் இழந்து, கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்கிறாள் என்ற அந்தக் கதை சினிமாவாக எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகை ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.
உன் அக்காவின் கல்யாணம், அம்மாவின் தீராத நோய், குடும்பத்தின் பொருளாதார நலிவு என்கிற மாதிரி சின்ன சின்னப் பிரசினைகளைப் பற்றியெல்லாம் அனாவசியமாக நீ அலட்டிக்கொள்ளாதே! அதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். அதைவிட அவருக்கு வேறென்ன வேலை? நீ உன் பி.இ. படிப்புக்கான வேலையில் சேர்ந்துவிட்டாயானால் உனக்கான ஆஸ்கர் பரிசை நீ வாங்குவது எப்போது?
இப்படியெல்லாம் எழுதி உன்னை உற்சாகப் படுத்த வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே! காரணம் நான்...
உன் அன்புள்ள,
அப்பா.
(13-02-2005 விகடனில் பிரசுரமானது. )
Wednesday, October 6, 2010
தெரியாத விடை

இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. கணேஷ் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
''இது உங்களுக்கு எத்தனையாவது இன்டர்வியூ?'' என்றார் ஒரு அதிகாரி.
''இருபத்தாறாவது!''
பின் அங்கிருந்த மற்றவர்கள் மாறி மாறி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தனர். எல்லாமே கஷ்டமான கேள்விகள். முதல் கேள்விக்கே தெரியாது என்று பதில் சொன்னான். அது மட்டுமல்ல, அவர்கள் அடுத்தடுத்துக் கேட்ட எட்டுக் கேள்விகளுக்குமே தெரியாது என்றுதான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.
ஒரு மௌன இடைவெளி. வேறு ஏதாவது கேள்வி இருக்கா என்பது போலத் தயக்கத்துடன் பார்த்தான் கணேஷ். இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது அவனுக்கு. ஆனால்...
''உங்களை செலெக்ட் செய்து விட்டோம்!'' என்றார்கள்.
''தேங்க்யூ சார்!'' விழிகள் விரிய ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்தவனிடம் அந்த அதிகாரிசொன்னார்...
''என்னடா எந்தக் கேள்விக்குமே நாம சரியா பதில் சொல்லலையே எப்படி இந்த வேலையை நமக்குக் கொடுக்கிறாங்கன்னு பார்க்கறீங்களா? நாங்க கேட்டதெல்லாம் ரொம்பக் கடுமையான, இந்த சேல்ஸ்மேன் வேலைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கேள்விகள். நாளைக்கு நீங்க எங்கள் தயாரிப்பை விற்கப் போகிறப்போ இந்த மாதிரி எத்தனையோ கேள்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்ப உங்களுக்குத் தேவை பொறுமையும் விடா முயற்சியும்! எங்கள் கேள்விகளுக்கு நீங்க கொஞ்சம் கூடப் பதறாமல் தெரியாது... இது பத்திப் படிக்கலேன்னு பொறுமையா பதில் சொன்னீங்க. இப்படி எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காம இருக்கிறதுதான் நாங்க உங்ககிட்டே எதிர்பார்க்கிற தகுதி!''
(விகடன் 06-03-05 இதழில் பிரசுரம்)
Monday, September 6, 2010
நுணுக்கம்
-10x12.jpg)
போன வாரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன் உதவி .மானேஜர்களை அழைத்து, ''அந்த ராம் நகர் பிராஞ்சில் மார்கெட்டிங் ஃபிகர் ரொம்ப டவுனாகியிருக்கு, உடனே பார்த்து சரிப்படுத்துங்க!'' என்று பணித்ததைப் பார்த்திருந்தார்.
('குமுதம்' 04-11-2009)
Tuesday, August 3, 2010
முன்னால் ஒரு வார்த்தை

(குமுதம் 17-09-2008 இதழில் வெளியானது)
Tuesday, July 6, 2010
தெளிதல்
வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர் சுகந்தன் மாமா. எந்த ஒரு பிரச்னைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும். குழப்பம் மிகும் நேரங்களில் நான் தேடி ஓடுவது அவர் வீட்டுக்குத் தான்.அப்படித்தான் அன்றைக்கும் போயிருந்தேன். ஒரு நூல்கண்டில் மும்முரமாக சிக்கல் பிரித்துக் கொண்டிருந்தார் மாமா. என்னைக் கண்டதும், ''வாம்மா சக்தி, விஷயம் இல்லாம வரமாட்டியே?'' என்று சிரித்தார்.
''எல்லாம் என் அப்பா விஷயமாத்தான் மாமா. எப்பவும் டென்ஷனாவே இருக்கார். எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறார். எல்லார் மேலேயும் அனாவசியத்துக்குக் கோபம். எப்படி அவரை சமாதானம் பண்றதுன்னே தெரியலே. ஏதாவது வழி சொல்லுங்களேன்!''
''முன்னேயெல்லாம் ரொம்ப நிதானமா இருப்பாரேம்மா? ஆபீசில் ஏதாவது பிரச்னையோ?'' என்று என்னிடம் பேச்சுக் கொடுத்தபடியே நூல்கண்டின் சிக்கலை விடுவிக்க ஆரம்பித்தார் அவர். பொறுமையாக நூலின் முனையைத் தேடியெடுத்து ஒவ்வொரு முடிச்சாக பிரித்தெடுக்கலானார்.
''எதுக்கு மாமா இவ்ளோ சிரமப்படறீங்க? இது சாதா நூல் தானே? சிக்கல் பகுதியைக் கட் பண்ணி எடுத்திட்டு மீதியை உபயோகிச்சுக்கலாமே?'' என்றேன்.
''அசடு, அசடு..! நூலை உபயோகிக்கவா இவ்வளவு மெனக்கெட்டு சிக்கலைப் பிரிச்சிட்டிருக்கேன்? இது என் தினசரி பிராக்டிஸ்மா! வேணும்னே நூல்கண்டில சிக்கல் பண்ணிக் கொடுத்துட்டுப் போவா என் பொண்ணு. தினமும் இப்படிச் சிக்கலைப் பிரிச்செடுக்கிறதில் ஒரு அரை மணி நேரமாவது செலவழிப்பேன். அதுல என் மனசை ஒருமுகப் படுத்தி நான் காட்டுற ஈடுபாடும், பொறுமையும், தொடர் முயற்சியும் தான் எந்தப் பிரச்னையையும் அதே மாதிரி அணுக உதவுது. சரி, அது போகட்டும்... உன் பிரச்னைக்கு என் ஆலோசனை என்னன்னா...''
''எனக்குத் தெரிஞ்சிடுச்சு! தாங்க்ஸ் அங்கிள்! நான் வரேன்,'' விரைந்தேன் வீட்டுக்கு.
(விகடன் 09-04-06 இதழில் வெளியானது)
Friday, June 25, 2010
எப்படி?

கணேஷை எல்லாரும் சூழ்ந்து கொண்டனர். ''எப்படிடா? எப்படிடா?''
எல்லார் வாயிலிருந்தும் ஒரே கேள்வி.
''ரெண்டு மணி நேரம் கெஞ்சிப் பார்த்தேன், ஸ்போர்ட்ஸ் குட்ஸ் விற்கிற கம்பெனி அது. ஸ்போர்ட்ஸில் அரை டன்னுக்கு சர்டிஃபிகேட் வெச்சிருக்கேன், என்னை ஏறெடுத்தும் பார்க்கலே. வேகன்சி இல்லவே இல்லேன்னு விரட்டிட்டாங்க! நீ எப்படிடா அந்தக் கம்பெனியில் வேலை வாங்கினே?'' -- ரகு.
''உன்னை விட ரெண்டு டிகிரி அதிகம் எனக்கு. என்னையே ஓரம் கட்டிட்டாங்க!'' -- கௌதம்.
புன்னகைத்தான் கணேஷ். ''நீங்க எல்லாரும் அங்கே போய் என்ன கேட்டீங்க?''
''எங்க தகுதியைச் சொல்லி ஏதாவது வேலை காலி இருக்கான்னு தான்!''
''நான் அப்படிக் கேக்கலே. 'சார், உங்க கம்பெனி ப்ராடக்ட்ஸ் எல்லாம் நல்ல தரமானதா இருக்கு. ஆனா, எங்க ஏரியாவிலே அதை ப்ரமோட் பண்றதுக்கு சரியான ஆள் யாரும் இல்லை, அதை நீங்க உடனே கவனிக்கணும்,' அப்படீன்னேன். உடனே, 'அதுக்கு நீங்க தயாரா'ன்னு கேட்டு இன்டர் வியூ பண்ணி எனக்கு வேலை போட்டுக் கொடுத்துட்டாங்க.''
''சாதுரியம்தான்!'' என்றது அவர்கள் பார்வை.
('நாணயம் விகடன்' Oct 1-2006 இதழில் வெளியானது)








