Saturday, October 11, 2025

கானாவுக்கெல்லாம் கானா..


கானாவுக்கு எல்லாம் கானா… அது இதானா?
“ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன் மேலே…
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே.."
படகில் எல்லாரும் அமர்ந்திருக்க படகோட்டியபடியே S S ராஜேந்திரன் பாடுவதாக… படம்: ‘தை பிறந்தால் வழி பிறக்கும்.’
அலைமேல் நாம் மிதப்பதுபோல் ராகம்! இதாண்டா கானா என்று இசையமைத்த K V மகாதேவனை எப்படி வியப்பதெனத் தெரியலே! நம் ஆசைப் படகை அத்தனை ஒய்யாரமாக ஓட்டிச் செல்லும் ட்யூன்! அந்த ஓங்கார வயலின் இடையிசை கூட அலைகளைப்போல் ஆர்ப்பரிக்கும்.
திருச்சி லோகநாதன் என்றதுமே நினைவுக்கு முதலில் வரும் பாடல்.
அவருக்காகவே அமைந்ததா என பொருந்திப் போகும் அவர் குரல் பாடலோடு. டைட்டில் வரியில் வரும் நாலு ‘லே’யையும் அவர் உச்சரிக்கும் ஸ்டைலையே நாலு வாட்டி கேட்கலாம்.
கண்ணதாசனின் வண்ண வரிகளுக்கு சாம்பிள்:
“வாழ்வில் துன்பம் வரவு.. சுகம் செலவு.. இருப்பது கனவு…”
“வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததேன்? வடிவம் மட்டும் வாழ்வதேன்?”
பல்லவி யோடு சேர்ந்து வந்து சேரும் ஒவ்வொரு சரணக் கடைசி வரியும் தத்துவமாய் விரியும். ("காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்..")
இப்ப வர்ற ஓலங்களைப் போல அல்லாமல் கம்பீரமான ஒரு கானாப் பாடல்!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!