எட்டாவது பிள்ளையாகப் பிறந்தவர்,
கிருஷ்ணரைப் போல.
கிருஷ்ணரைப் போல.
"தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. " வரிகளை எழுதியவர்.
" கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்." என்ற வரிகளும் அவருடையவையே. (இந்த இரு பாடல்களும் 'கடவுளின் குழந்தை' படத்திலும் இடம் பெற்றன)
உப்பு சத்தியாக்கிரகத்தின் போது இவர் பாடிய பாடல் நினைவிருக்கும்... " கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!"
அந்தப் பிரபல படம்.. எம்ஜிஆர், பானுமதி நடித்த 'மலைக்கள்ளன்' இவருடைய கதை தான். பட்சிராஜாவின் ஸ்ரீராமுலு நாயுடு அதை இந்தியிலும் தயாரித்தார். 'Azaad'. திலீப்குமார் மீனாகுமாரி நடித்தனர்.
திருக்குறள் உரை, ‘கம்பனும் வால்மீகியும்’… நிறைய நூல்கள்!
1949இல் அரசவைக் கவிஞர் ஆனார். 1971இல் பத்மபூஷன் விருது.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!