இன்றைய மாணவர்களுக்கு கற்பித்தால் அவர்களது 'நாளை'யை நாம் அபகரிக்கிறோம்.’
இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்… கல்வி பற்றிய தீர்க்கமான கருத்துக்களை மொழிந்தவர்… அமெரிக்க பல்கலைக் கழகங்களின் புகழ் பெற்ர பேராசிரியர்… Pragmatism-ன் தந்தை எனப்படுபவர்.
John Dewey... இன்று பிறந்த நாள்!
உதிர்த்த வேறு சில முத்துக்கள்…
‘கல்வி என்பது வாழ்க்கைக்கான தயார்ப் படுத்துதல் அல்ல; கல்வி தான் வாழ்க்கையே.’
‘தான் எதை செய்வதற்குத் தகுதியானவன் என்று கண்டுபிடித்து அதைச் செய்வதற்கான வாய்ப்பை தேடிக் கொள்வதே சந்தோஷத்திற்கான திறவுகோல்.’
‘விஞ்ஞானத்தின் மாபெரும் முன்னேற்றம் ஒவ்வொன்றும் ஒரு புதிய, முரட்டுத்தனமான கற்பனையில் இருந்தே உதித்திருக்கிறது.’
‘சந்தேக மனப்பான்மை: கற்றறிந்த மனதின் தோற்றமும் அடையாளமும் அதுதான்!’
‘நிஜமாய் சிந்திக்கும் எவரும் வெற்றிகளில் இருந்து கற்றுக் கொள்ளும் அதே அளவு தோல்விகளில் இருந்தும் கற்றுக் கொள்கிறார்.’
‘சொல்வதற்கு ஏதாவது வைத்திருப்பதற்கும் ஏதோ ஒன்றை சொல்ல வேண்டியிருப்பதற்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு.’
‘நாம் மிக முக்கியமாக கைக்கொள்ள வேண்டிய வழக்கம் என்பது மேலும் மேலும் அறிந்து கொண்டே இருப்பதிலான ஆர்வமே.’
‘சிந்திக்காமலேயே உண்மைகளை ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால் உண்மைகளின்றி சிந்திக்க முடியாது.’
‘அறிவையும் திறமையையும் அனுபவத்தில் உரசிப் பார்ப்பதே கற்றுக் கொள்ளலின் திறவுகோல்.’
‘பிரச்சனைகள் நம்மை எதிர் கொள்ளும்போது மட்டும் தான் நாம் சிந்திக்கிறோம்.’
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!