Tuesday, November 7, 2023

மட்டற்ற உயரத்துக்கு...


பத்திரிகை ஆபீஸுக்குள் பரதநாட்டியம் ஆடச் சொல்லிக்கொடுக்கும் பிடிவாத விமர்சகர் பாலுவை மனதில் நினைக்கையில்…

அவரைத் தள்ளிக் கொண்டு… ‘மை ஸன் இஸ் யுவர் ஸன்,’ என்றதும் புருவமும் உதடுகளும் துடிக்க, சூர்யா எங்கேன்னு பதறும் அப்பா வேலு நாயக்கர் வருகிறார்.

‘தப்பு அது இல்லடா..’ன்னு முகத்தை ஒரு உதறு உதறும் ஆளவந்தான் அவர் மேலே வந்து நிற்க..

தான் காதலிக்கும் மோனா தன்னைக் காதலிக்கவில்லைன்னு தெரிந்ததும் அதை அப்படியே ஜாலி நட்பாக முகத்தில் பிரதிபலிக்கும் ‘Saagar’ ராஜா தலைகாட்ட..

‘எதுக்குக் கரையறே நீ இப்போ?’ன்னு கரையும் ‘மைக்கேல் மதன' காமேஸ்வரன் எட்டிப் பார்க்கிறார். அவரை முந்திக்கொண்டு

பிய்ந்த முகத்துடன் ‘ஷூட் மீ ஷூட் மீ’ன்னு குருதி கொட்ட அதட்டும் குருதிப்புனல் ஆதி வந்து நிற்கிறபோது..

மன்னனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பெருமாளையும் பார்த்துவிட்டு கையைப் பிசைந்தபடி இயலாமையில் உதட்டைப் பிதுக்கும் தசாவதாரம் ரங்கராஜன் ஸீனுக்கு வர..

‘இது ஞாபகம் இருககா, அது ஞாபகம் இருக்கா'ன்னு ஸ்ரீதேவியிடம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வெந்த மனதின் வேதனையுடன் போட்டிபோட்டுக்கொண்டு குட்டிக்கரணம் அடிக்கும் சீனு அவரைத் தள்ளிக்கொண்டு வர..

அவரை முந்திக்கொண்டு ‘ரெண்டு வருஷமா என் பிள்ளை சாப்பிட்ட சோறு, நான் சாப்பிட மாட்டேனா’ந்ன்னு மகாநதி கிருஷ்ணா சிரிக்க..

‘போதுண்டா, போங்கடா, போய்ப் புள்ளை குட்டிங்களை படிக்க வைங்கடா…’ன்னு தோல்வியின் வேதனையைக் கொட்டும் தேவர் மகன் சக்திவேல் தோன்றுகிறார்.

கலையை அதன் மட்டற்ற உயரத்துக்கு எடுத்துச்செல்ல எத்தனை முயற்சி மேற்கொள்ளுகிறார்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பிறந்த நாள் பகிர்வு. ரசித்தேன் - அவரது சில படங்களை ரசித்தது போலவே உங்கள் அனைத்து பதிவுகளையும் - இப்பதிவு உட்பட!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!