அட்வைஸ் பண்ணியதில்லை. சஜெஸ்டிவாகவே சொல்லுவார். ‘கலைமகள் அகிலன் நினைவு சிறுகதைப் போட்டி'யில் இரண்டாவது பரிசு பெற்ற என் சிறுகதையைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். அடுத்து சந்தித்தபோது, ‘இலக்கியப் பத்திரிகைகளில் எழுதலாமே நீங்கள் முயன்றால், கொஞ்சம் பயின்றால்,’ என்றார்.
எப்போது சந்தித்தாலும் தன்னுடைய மதிப்பான நேரம் வீணாவதை பற்றி கவலைப்படாமல் ஆத்ம சந்தோஷமாக உரையாடுவார். இதை அவரிடமிருந்து ஒரு பாடமாக நான் கற்றுக்கொண்டேன்.
சுந்தர ராமசாமி... May 30. பிறந்த நாள்!
நம் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உண்டு என்பது தெரியும். அந்த அர்த்தம் என்ன என்று கண்டுகொள்ள உதவியவர்களில் ஒருவர்.
அவர் எழுத வேண்டியதை அவர் எழுதி விட்டார். நாம் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியது தான் பாக்கி!

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!