Wednesday, April 26, 2023

பன்முக வித்தகர்....


‘எப்படி நாம் கடந்த காலத்தின் சந்ததியோ அதேபோல் வருங்காலத்தின் பெற்றோரும் நாம்தாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.’

சொன்னவர் Herbert Spencer (1820 -1903)
அறிவியலாளர், தத்துவவாதி...பன்முக வித்தகர். இன்று பிறந்த நாள்!
அவர் காலத்தில் மிக அதிகம் பேசப்பட்டவர்.
சர்வ சகஜமாக இன்று நாம் பயன்படுத்தும் 'Survival of the Fittest' என்ற சொற்றொடரை அமைத்தவர் இவர்தான்.
இன்னும் சொன்னவை...
‘கல்வியின் முக்கிய குறிக்கோள் அறிவு அல்ல, செயல்பாடு.’
‘அறிவியல் தேடல்களுக்குள் இறங்காதவர்கள், அவற்றைச் சுற்றியுள்ள கவிதைகளைக் கொஞ்சமும் அறிய மாட்டார்கள்.’
‘நாம் மிகுந்த விருப்பத்துடன் தேடும் பொருட்கள், கிட்டும்போது அந்த அளவு சந்தோஷத்தைக் கொண்டு வருவதில்லை. பெரும்பாலான சந்தோஷங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து வருகின்றன.’
‘நுண்கலைகளில் மிக உயர்ந்த இடத்தை இசைக்குத்தான் தர வேண்டும். எல்லாவற்றையும்விட அதுவே மனிதனின் ஆன்மாவைக் கட்டிக் காக்கிறது.’
‘அன்பு தான் வாழ்வின் முடிவு, ஆனால் அது முடிவில்லாதது. அன்பு தான் வாழ்வின் சொத்து ஆனால் செலவழிக்கத் தீராதது. அன்பு தான் வாழ்வின் பரிசு. அளிப்பதில் கிடைக்கும் பரிசு.’
‘ஒரு மனிதனின் அறிவு ஒழுங்கற்றதாக இருந்தால், அது எத்தனை அதிகம் இருக்கிறதோ அத்தனை குழப்பம் ஏற்படும்.’
‘பாரபட்சத்தை நாம் அனைவரும் எதிர்க்கிறோம் ஆனால் பாரபட்சம் நம் அனைவரிடமும் இருக்கிறது.’
><><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!