Thursday, April 20, 2023

பொன் மனம்...


மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கைகளைப் பூட்டி அறைகளில் அடைத்து வதைகளுடன் கூடிய வைத்தியம் பார்த்தது அவரை வதைத்தது. கதவுகளைத் திறந்து விட்டார். கலந்துபேசி ,அருகாமையில் ஒரு தோழமை கொடுத்து... என்று மனோ தத்துவத்தில் புதிய அத்தியாயங்களை எழுதினார்.

'Father of Modern Psychiatry' என்று அழைக்கப்பட்ட Phillipe Pinel... இன்று பிறந்த நாள்!
மன அழுத்தம், சமூகத் தாக்கம், ஏன் உடலளவிலான பாதிப்பு கூட மனதில் பிழைகளை பிறழ்வுகளை ஏற்படுத்தலாம் என்றிவர் சொன்னது நிறைய மாற்றங்களை உண்டாக்கியது. புரிந்து உணர்ந்து குணப்படுத்தும் வழிகளைப் புகுத்தினார். நம்ம டாக்டர் V S ராமச்சந்திரனின் பிரபல 'Phantoms in the Brain' அன்பர்கள் நினைவுக்கு வரலாம்..
படித்த மருத்துவப்படிப்பு பாரிஸில் அங்கீகரிக்கப்படாததால் பல வருடங்கள் எழுத்தாளராக கழிக்க நேர்ந்தது. மனநிலை பாதித்து தற்கொலை செய்துகொண்ட நண்பரின் மறைவு இவரை மனநல மருத்துவத்தில் இறங்க வைத்தது. இவர் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று தேறி, அங்கேயே வேலைக்கு சேர்ந்திருந்த புஸின் என்பவரிடமிருந்து தயங்காமல் நிறைய கற்றுக்கொள்ளும் அளவு ஆர்வம்!

><><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!