499
அடிமை சாசனம்
எழுதிக் கொடுத்தே பெற்றேன்,
உன்னுடனான சுதந்திரத்தை.
500
நினைவில் ஆழும்போதெல்லாம்
நீயே ஆளுகிறாய் என்
நினைவை.
நீயே ஆளுகிறாய் என்
நினைவை.
501
நினைவுகளுக்கு ஒரே திசை.
நீ இருக்கும் திசை.
நீ இருக்கும் திசை.
502
இட்டுவிட்டேன் கவிதை ஐநூறு.
விட்டு விடேன், என்கிறாய், கவிதையை.
விட்டு விடேன், என்கிறாய், கவிதையை.
503
ஸ்தம்பித்தே நிற்கின்றன
வருடங்கள் உன்
வனப்பில்.
வருடங்கள் உன்
வனப்பில்.
504
ஆற்றின் இரு கரையும்
ஒன்றானாற்போல்
நீ எனக்கு.
ஒன்றானாற்போல்
நீ எனக்கு.
505
எங்கோ திறக்கிறது ஒரு கதவு
ஓடி வருகிறேன்..
உன் மனக்கதவோ?
ஓடி வருகிறேன்..
உன் மனக்கதவோ?
506.
ஒரு பார்வைதான் பார்க்கிறாய்...
உணர்ந்து கொள்கிறாய் என்
அன்றைய உள்ளத்தை.
உணர்ந்து கொள்கிறாய் என்
அன்றைய உள்ளத்தை.
507
நானும் என் கவிதைகளும்
இந்த இரவு பூராவும்
விழித்துக்கொண்டு...
இந்த இரவு பூராவும்
விழித்துக்கொண்டு...
508
சந்திக்குமுன்
நான், மற்றும் நீ.
சந்தித்தபின்
நீ நீ நீ...
நான், மற்றும் நீ.
சந்தித்தபின்
நீ நீ நீ...
><><

2 comments:
நினைவுகள் அருமை...
அனைத்தும் சிறப்பு. அவள் கவிதைகள் ஐநூறைத் தாண்டி. வாழ்த்துகள்.
Post a Comment