“கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்!
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்."
அங்கே குருக்கள் நாகையா பாடிக் கொடிருக்கிறார்.
"..கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்!
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!"
கண்ணன் எப்படியெல்லாம் வந்தான் என்பதை கண்ணதாசனைவிட யாரால் அத்தனை அழகாகச் சொல்ல முடியும்?
எங்கோ ஒரு மதகு திறந்து, ஒரு திவலை விடாமல் மனக் கவலை வடிந்துவிட்ட மாதிரி…தானாய் ஓர் ஊற்று சுரந்து அன்பு வெள்ளம் நிறைந்து பெருக்கெடுத்தாற்போல உணர்ந்து…
இப்போது ஜெமினியும் சேர்ந்து பாடுகிறார்.
"கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்!
காவல் என்னும் கைநீட்டிக் காக்க வேண்டும்!"
கனிவும் ஏக்கமுமாக அவர் குரலும் (டி.எம்.எஸ்.) அன்பும் ஆதரவுமாக இவர் குரலும்... (சீர்காழி)
உருகி உருகி பாடுகிறார்கள். மருகி மருகி கேட்கிறோம்.. படம்? 'ராமு.'
அந்தக் கடைசி வரிகள்! விஸ்வநாதனின் இசை இங்கே விஸ்வரூபம் எடுக்கிறது.
"கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா!
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா..!"
எல்லோருடைய உள்ளமுமே வேண்டுவதல்லவா அது!
><><><
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!