Friday, December 15, 2023

உனக்குள் நானே...


அட்டகாசமான அந்த பாடல்வரிகளை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியாது.. (எழுதியவரை ஊகியுங்கள் பார்க்கலாம்!)

“உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா..
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா..”
...என்று தொடங்கும் ஜோதிகா பாடும் அந்தப் பாடல் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில்.
பின்னியெடுக்கும் ஹாரிஸின் இசையில் மின்னித் தெறிக்கும் அதன் வரிகள்!
இதோ சில..
“கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்துக் கொண்டாளே..”
“சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா..”
“தீபோல் தேன்போல் சலனமே தான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச் சென்றாயே!
நினைவை வெட்டிச் சென்றாயே!”
“ஏனோ நம் பொய் வார்த்தையேதான்?
ஏனதில் உன் என் மௌனமேதான்?”
"பொன் மான் இவளா..
உன் வான வில்லா.."
எழுதியவருக்கு இன்று பிறந்த நாள்!
ரோகிணி!

>><<>><<

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!