Tuesday, August 31, 2021

அனுபவம் தாண்டாத அறிவு...


‘எந்த ஒரு மனிதனின் அறிவும் அவன் அனுபவத்தை தாண்டியதல்ல.’

சொன்னவர் John Locke. பதினேழாம் நூற்றாண்டில் தலைசிறந்த தத்துவவாதிகளில் ஒருவர். அறிவியலாளரும் கூட.
John Locke... ஆகஸ்ட் 29. பிறந்த நாள். (1632 - 1704)
இன்னும் சொன்னவை:
‘எதற்குக் கவலைப்படுகிறாயோ அது உனக்கு எஜமானாகி விடுகிறது.’
‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சொத்து அவனுக்குள்ளாக உண்டு. அவனைத் தவிர யாருக்கும் உரிமையில்லாத சொத்து.’
‘பெரியவர்களின் சொற்பொழிவுகளில் இருந்து பெறுவதைவிட குழந்தையின் எதிர்பாராத கேள்விகளிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.’
‘ஓடை நீர் ஏன் கசக்கிறது என பெற்றோர் வியக்கிறார்கள், ஊற்றை அவர்களே மாசுபடுத்திவிட்டு.’
‘உலகுக்கு நாம் இடும் ஒரே வேலி அதைப் பற்றிய முழு அறிவு தான்.’
‘நாம் பச்சோந்திகள் மாதிரி. நம் சாயலையும் வண்ணத்தையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம்.’
‘கல்வி ஒரு மனிதனை தொடங்கி வைக்கிறது. ஆனால் வாசிப்பும் யோசிப்பும் நல்ல நட்பும்தாம் அவனைப் பூர்த்தி செய்கிறது.’
‘தைரியமே மற்ற நற்குணங்களின் துணையும் பாதுகாப்பும்.’

‘நாம் புரிந்து கொள்வதை விருத்தி செய்வது இரண்டு காரணத்துக்காக. முதலில் அறிவை அதிகரிக்க. இரண்டாவது அந்த அறிவை மற்றவர்களுக்கு அளிக்க.’

>><<


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான எண்ணங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!