Thursday, August 19, 2021

தினமும் உங்களை புதுப்பித்துக் கொண்டே...

 யார் இந்த முன்னேற்ற வாசகங்களைச் சொல்லியிருப்பார் என்று ஊகிக்க முடிகிறதா?


'பறக்கக் கற்றுக் கொள்வது வசீகரமானது அல்ல. ஆனால் பறப்பது வசீகரமானது'

'ரசிக்க முடிகிற வரையில் உங்கள் வேலையை நன்றாகவும் மனப்பூர்வமாகவும் நேர்மையான நோக்கத்துடன் செய்யுங்கள், வாழ்க்கை உங்களை ஒருபோதும் ஏமாற்றாது.’

‘ஒவ்வொரு மனிதரும், நிறுவனமும், ஏன், சமூகமும் ஒரு கட்டத்தை அடைந்தவுடன் தங்கள் நோக்கத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் - புத்துணர்ச்சியூட்டிக்கொள்ள, புதிதாக கட்டமைத்துக் கொள்ள, மீண்டும் சிந்திக்க வேண்டும்.’

‘புதியவைகளை நோக்கித் தாவா விட்டால் நீங்கள் ஜீவிக்க முடியாது.’

‘உங்கள் போட்டியாளர் மீது எப்போதும் மதிப்பு வைத்திருங்கள், அவர்களை வியந்து பார்க்க வேண்டியதில்லை.’


‘நமக்கு வேண்டியது புத்திசாலித்தனமான இயந்திரங்கள் அல்ல, புரிந்துகொள்ள எளிதானவை. செயற்கை நுண்ணறிவு அல்ல, கூட்டு அறிவு.’


‘உங்களுக்கு என்று நீங்கள் வகுத்துக் கொள்ளும் பார்வை, நீங்கள் வாழ்க்கையை நடத்தும் விதத்தை வெகுவாக பாதிக்கிறது.’

‘தினமும் உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள். சிலசமயம் வெற்றியடைவீர்கள், சிலசமயம் அடைவதில்லை. இரண்டின் சராசரி என்னவோ அதுதான் முக்கியம்.’

‘உலகில் இருக்கும் நிலையற்ற தன்மையை இன்னும் ஆழமாக உணர்ந்து கொண்டால், மனதில் ஒரு சமநிலையை வளர்த்துக் கொள்ள முடியும். வாழ்வின் உயர்வுகளும் வீழ்ச்சிகளும் திகைக்க வைக்காது. அப்போதுதான், சுற்றியுள்ளவர்களின் மீது ஆழமான பரிவையும் பச்சாதாபத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்.’

‘எந்தப் பழக்கங்களால் முதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களோ அந்தப் பழக்கங்களையே மக்கள் மறந்துவிடச் செய்கின்றன வெற்றிகள்.’

‘நாம் செய்வது வேலை அல்ல, மற்றவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது என்பதை அறியும் போதுதான் அது மிகச் சிறந்த வேலை ஆகிறது.’

‘என் வளர்ச்சியை பற்றி நான் யோசிக்கும்போது, என் வெற்றிகள் என் தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டவைகளால் கட்டமைக்கப்பட்டவை.’

'நான் இன்னும் உழைக்க வேண்டும். ஏணியில் ஏறுவதற்காக அல்ல. மிக முக்கியமான வேலைகளைச் செய்வதற்காக!'

… சொன்னவர் Satya Nadella. மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனத்தின் சி. இ. ஓ. இவரின் பிரபல ‘Hit Refresh’ புத்தகம் படித்திருப்பீர்கள்...

இன்று பிறந்த நாள்!

2 comments:

கோமதி அரசு said...

மிக அருமையான கட்டுரை.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. தகவல்கள் நன்று.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!