Wednesday, May 13, 2020

மங்காத சிங்கார வேலன்...

இந்தப் பத்துப் பாடல்களுக்கும் ரெண்டு ஒற்றுமை.
முதலாவதை ஈசியா சொல்லிடுவீங்க: எல்லாமே அருமையான & ஹிட் பாடல்கள்! ரெண்டாவது?
1.சிங்கார வேலனே தேவா...
2.குங்குமப் பூவே... கொஞ்சும் புறாவே…
3. யாரடீ நீ மோகினி… கூறடீ என் கண்மணி..
4. சித்திரம் பேசுதடி... என் சிந்தை மயங்குதடி…
5. மாசிலா நிலவே நம்.. காதலை மகிழ்வோடு....
6. எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?
7. இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
8. ஏமாறச் சொன்னதும் நானோ? என் மீது கோபம் ஏனோ?
9. அமுதைப் பொழியும் நிலவே.. நீ அருகில் வராததேனோ?
10. உன்னைக் கண் தேடுதே.. உன் எழில் காணவே..
யூகித்தீர்களா ரெண்டாவதை?
இந்தப் பாடல்களையெல்லாம் எழுதியவர் ஒருவரே!
கு. மா. பாலசுப்ரமணியம். இன்று பிறந்தநாள்!
சின்னவயதில் தந்தையை இழந்து, மேலே படிக்க வழியின்றி, சின்ன சின்ன வேலைகள் பார்த்து, கதைகள் எழுதி, உதவி ஆசிரியராகி...
'ஓர் இரவு' படத்துக்கு உதவி டைரக்டராக சேர்ந்தவர் ஒரு பாடலை எழுதிக் காட்ட, எல்லாருக்கும் பிடித்துப் போக, மேலும் இரு பாட்டெழுதி... விரைவில் பிரபல பாடலாசிரியர்!
ஒன்றிரண்டு படத்துக்கு வசனமும்! அதிலொன்று பிரபல 'கொஞ்சும் சலங்கை.'

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

எடுத்துக் காட்டிய அனைத்து பாடல்களுமே சிறப்பான பாடல்கள்.

பாடலாசிரியரை இன்று உங்கள் வழி அறிந்து கொண்டேன். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!