Saturday, November 24, 2018

அதுவாகவே... (கவிதைகள்)

அதுவாகத் தோன்றும் ஒரு வரி.
(அதுவரை காத்திரு)
அதைத் தொடர்ந்து போ.
புதிதாகத் தோன்றும் ஒரு எண்ணம்.
பொறுத்திரு.
மெதுவாக வந்து சேரும் வார்த்தைகள்.
செம்மைப் படுத்திட...
சுவையாகத் தெரிந்தாலும்
மெதுவாக நிறுத்தி இனி
படிப்பவரிடம் விடு.
><><><


அமைதியைத் தேடி  
ஆயிரமாயிரம் தூரம் கடந்து
அமைதியுற்றது மனம் 
தன்னைக் கண்டு கொண்டு.

><><><

ஓய்ந்துவிட்டன நினைவுகள்,
அவை எழுப்பிய 
ஓசைகள் அடங்கவில்லை 
இன்னும்...
><><


மனம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது..
மனம் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறது..
><><


காற்றில் கலந்திருந்த
காலை மலரின் வாசத்தை
நுகர்ந்து மகிழ்ந்த மனம்
நாளைத் தொடங்குகிறது
நாவில் பாடலுடன்.
><><


தேங்கிக் கிடக்கும் குட்டையின் தெளிந்த நீரில்
ஓங்கித் தெறித்த கதிரொளிச் சிதறல்கள்
ஆங்காங்கே வளர் கரையோர நாணல்களின்
ஆடும் இலைகளில் விழுந்தும் விழாமலும் 
காட்டிடும் ஜாலமோ அவன் தரும் காட்சி!
><><


இன்னும் எத்தனை முறை இப்படி 
சிரிக்க முடியும் வாழ்வில் என்று நினைத்ததும்
சிரிப்பு சிறிதாகிறது...
இன்னும் எத்தனை முறை இப்படி
அழவேண்டும் வாழ்வில் என்றதும்
அழுகை பெரிதாகிறது.
><><

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிரிப்பும் - அழுகையும்... எதார்த்தம்.

கவிதைகள் அனைத்துமே சிறப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் சொல்லும் பதில்களை ரசித்தேன்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!